இது 2003-ல் நான் வரைந்த ஓவியம்
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Wednesday, April 15, 2009
Saturday, April 04, 2009
எங்கிருந்து வந்தாயடி
-*-
எங்கிருந்து வந்தாயடி..
என்னுயிரில் கலந்தாயடி...
-*-
இமைத் துடிப்பின் நடுவினிலே -
உன் உயிர்த்துடிப்பை உணர்கின்றேன்.
-*-
உயிர்த் துடிப்பாய் இருந்திட்டாய்-நீ
குருதியையும் பங்கிட்டாய்.
-*-
குருதியையும் பங்கிட்டேன்-என்
வாழ்வின் பொருள் உணர்ந்திட்டேன்.
-*-
வாழ்வின் பொருள் உணர்த்திட்டாய் - நீ
வாழ வைத்த தெய்வமன்றோ.
-*-
என் கருவறையில் -உன்னை
கரு என்பதா
கடவுள் என்பதா
சிசு என்பதா -அழகுச்
சிலை என்பதா?
-*-
பொன்னகை தான்
மின்னிடுமோ உன்
புன்னைகை முன்னாலே.
-*-
தென்றலும் தான்
தவித்திடுமோ -உன்
தேகம் தனை தீண்டிடவே .
-*-
பகலவனும் துணிவானோ-உன்
பட்டு மேனி சுடுவதற்கு?
-*-
வெண்ணிலவும்
தேய்ந்ததுவே உன்
பால் கண்கள் கண்டதினால்.
-*-
உயிரே
உறவே
கருவே
திருவே
சிசுவே
சிலையே
எங்கிருந்து வந்தாயடி
என்னுயிரில் கலந்தாயடி
-*-
நிலாவுக்காக ரொம்ப நாள் முயற்சி செஞ்சு கவிதை எதுவுமே உருப்ப்பா வரல...இது கொஞ்சம் பரவ்யில்லாமல் வந்துச்சுன்னு சில மாதங்களுக்கு முன்னாள் பதிவிட்டுருந்தேன்... இப்போ மறுபடியும் எல்லோர் பார்வைக்காகவும்.
கடவுளை உச்சி முகர்ந்தபடி ,,
பொன்னாத்தா
Thursday, March 26, 2009
விட்டு விடு; விலகி விடு;
விடுதலைக்காகவே
காத்திருந்த
கண்ணீரும்...
-*-
விடை பெறவே
காத்திருந்த
இதயத் துடிப்பும்...
-*-
விட்டு விடவே
காத்திருந்த
நீயும்....
-*-
இன்று என்னுள்
இன்று என்னுள்
செத்துப் போய்.
சடமாய் ...
பொன்னாத்தா
மக்களே...காதல் தோல்வி எல்லாம் இல்லீங்கோவ்...சும்மாச்சுக்கும் மனசுக்குள்ள பீலிங் ஏத்திப் பார்த்தேன்....
இதையே மாற்றி ஆதவா எழுதியது..
கண்களில்
சிறைபட்டிருந்த
கண்ணீரும்....
உனக்காகவே
காத்திருந்த
இதயத்துடிப்பும்...
விட்டுவிடாமல்
நின்றிருந்த
நீயும்...
இன்று என்னுள்
தொலைந்துபோய்....
திருத்தி எழுதியபடி
ஆதவா [ ஹி ஹி ]
Wednesday, March 11, 2009
மொக்கை கவிஜ- தொடர் பதிவு
தொடர் பதிவுஅழைத்தது தேவா...
நமக்கெல்லாம் நல்ல கவிதை எழுத சொன்னாலே மொள்ளையா தான் எழுத வரும்...இப்டி மொள்ளைக் [ மொக்கை] கவிதை எழுத சொன்ன என்ன தான் வரும்...
நம்ம டாக்டர் தேவா நல்லா தானே இருந்தார்...யாரும் பில்லி சூனியம் வச்சுட்டாங்களா....உச்சா போகும் பொது யுரேகா யுரேகா மாதிரி மொக்கை மொக்கைனு கத்திகிட்டே மொக்கை கவிஜ போட்டு அதுல ஒரு நாலஞ்சு போரையும் இழுத்து விட்ருக்காரு
நல்லா இருங்க சாமி....நீங்களும் உங்க புள்ளைக் குட்டிகளும் நல்லா இருப்பீகய்யா.....நல்லா இருப்பீக...
என்னமோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா என்னோட மொக்கையை உங்கள் மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்குறேன்......அது மொக்கையா இல்ல கரும்பு சக்கையானு நீங்கதேன் முடிவு செய்யணும்....
---------------------------------------------------------------
கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
வாயைத் திறந்தா பொக்கை பாரு
------------------------------------------------------------
குறிப்பு: இந்த மொக்கை எந்த அக்காவையும், அப்பத்தாவையும் நோகடிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை...முழுக்க முழுக்க என் கற்பனையே....
சரி....இப்போ நான் யாரவது ரெண்டு பேரை இழுத்து போடனுமே....யாருப்பா அது ...பின்னாடி பம்முறது.....
நான் அழைப்பு மணி அமுக்கும் பதிவு வாசல்கள் :
தேவி : வானவில் [ தேவி என் கல்லூரித் தோழி]
நசரேயன் : என் கனவில் தென்பட்டது
மொக்கையை முழுங்கியபடி
பொன்னாத்தா
நமக்கெல்லாம் நல்ல கவிதை எழுத சொன்னாலே மொள்ளையா தான் எழுத வரும்...இப்டி மொள்ளைக் [ மொக்கை] கவிதை எழுத சொன்ன என்ன தான் வரும்...
நம்ம டாக்டர் தேவா நல்லா தானே இருந்தார்...யாரும் பில்லி சூனியம் வச்சுட்டாங்களா....உச்சா போகும் பொது யுரேகா யுரேகா மாதிரி மொக்கை மொக்கைனு கத்திகிட்டே மொக்கை கவிஜ போட்டு அதுல ஒரு நாலஞ்சு போரையும் இழுத்து விட்ருக்காரு
நல்லா இருங்க சாமி....நீங்களும் உங்க புள்ளைக் குட்டிகளும் நல்லா இருப்பீகய்யா.....நல்லா இருப்பீக...
என்னமோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா என்னோட மொக்கையை உங்கள் மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்குறேன்......அது மொக்கையா இல்ல கரும்பு சக்கையானு நீங்கதேன் முடிவு செய்யணும்....
---------------------------------------------------------------
கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
வாயைத் திறந்தா பொக்கை பாரு
------------------------------------------------------------
குறிப்பு: இந்த மொக்கை எந்த அக்காவையும், அப்பத்தாவையும் நோகடிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை...முழுக்க முழுக்க என் கற்பனையே....
சரி....இப்போ நான் யாரவது ரெண்டு பேரை இழுத்து போடனுமே....யாருப்பா அது ...பின்னாடி பம்முறது.....
நான் அழைப்பு மணி அமுக்கும் பதிவு வாசல்கள் :
தேவி : வானவில் [ தேவி என் கல்லூரித் தோழி]
நசரேயன் : என் கனவில் தென்பட்டது
மொக்கையை முழுங்கியபடி
பொன்னாத்தா
Sunday, March 01, 2009
நிலவில் ஒரு நாள்!!
நேரம் : நள்ளிரவு
ஆழ்ந்த நித்திரை
தீவிரமான நிசப்தம்
டொக் டக் டொக் டக்
நித்திரைக் குதிரை என் வீட்டு வாசலில்
என் ஆத்மாவோ ஆவியோ..எதுவென்று தெரிய வில்லை..
எனை விட்டு மெதுவாக
என் மேனி நோகாமல் பிரிந்து எழுந்தது.
என் கண்கள் திறக்காமல் திறந்தன.
ஆத்மா (எ) ஆவிக்கு "நான்" என்றும்
நித்திரை குதிரைக்கு "கனவு" என்றும் பெயர் சூட்டப் பட்டது.
நான் நடந்து கனவிடம் சென்றேன்.
கனவு கேட்டது .."எங்கு உன்னை இட்டுச் செல்லட்டும்"
நான் சொன்னேன் " நிலவிற்கு"
கனவு குனிந்து அதன் மேலேறச் சொல்லி சமிக்ஞை செய்தது.
என்னை மேலேற்றியது காற்றா கனவா தெரிய வில்லை
இப்பொழுது கனவின் முதுகில் நான்
பஞ்சு மேல் பறப்பதாய்
தென்றல் என் காதோரம் பேசிச் செல்வதாய்
வெள்ளியருவி வீழ்வதாய்
எங்கெங்கும் அற்புதங்கள்
மின்மினிப் பூச்சியாய் விண்மீன்கள்
கண் சிமிட்டியபடி
நிலவு சேர்ந்து விட்டோம்
தெருவெங்கும் பாலாறாய் நிலவு வெளிறிப் போய்.
எத்தனை ஏழைக் குழந்தைகளுக்கு பசியாற்றலாம் - நினைத்தேன் நான்
வெள்ளை ரோஜா தவிர வேறெதற்கும் அனுமதி இல்லை போலும்
எங்கெங்கும் வெள்ளிப் பூக்களாய் வெள்ளை ரோஜாக்கள்
நான் இறங்கி நடந்தேன்..
இல்லை இல்லை கனவுடன் பாலாற்றில் மிதந்தேன்.
அவ்வளவும் அழகாய் கண் விரிய வைக்கும்
ஆச்சர்யமாய்.
எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் தெரிய வில்லை.
மயக்கம் தெளிந்தவளாய்
ஒரு கணம் நின்றேன். ஏதோ யோசனை
கீழே குனிந்து பார்த்தேன்
பூமிப் பந்து பிரகாசமாய்.
மனதுக்குள் சுருக்கென்று சோகம்.
சட்டென்று நிலவு வெறுத்து விட்டது
திரும்பி நடை போட்டேன்...இம்முறை மிதக்க வில்லை... நடந்தேன்..
கனவு கேட்டது..."என்ன ஆயிற்று"
நான் சொன்னேன் .." நிலவு வெறுத்து விட்டது"
கனவு புருவம் தூக்கிய படி "என்ன? "
நான் : "ஆம் நிலவு ஒரு வெற்று
நிலவு ஒரு போலி
நிலவு ஆடம்பரம்"
நிலவில் அன்பில்லை"
கனவு ." ஏன்...என்ன இல்லை நிலவில்?"
நான் : "மின்மினுக்கும் நட்சத்திரங்களும்
பாலாறாய் சாலைகளும்
வெள்ளியாய் பூக்களும்
வேண்டாமே எனக்கு "
கனவு " என்ன ..இந்த ஆடம்பரம் வேண்டாமா? வேறென்ன வேண்டும் உனக்கு"
நான் " எனை உற்றவன் இங்கில்லை
என் உடன் பிறந்தவள் உடனில்லை
எனக்கு உயிர் குடுத்தவரும் காண வில்லை
என்னிடம் உயிர் பகிர்ந்தவளும் அருகிலில்லை
நிலவில் அன்பும் இல்லை; அரவணைப்பும் இல்லை "
கனவு தலை குனிந்து அமைதி காத்தது
நான் நடையைத் தொடர்ந்தேன்
கனவு விரைந்து முன் வந்து குனிந்து ஏறச் சொன்னது
பறந்து விரைந்தோம்.
டொக் டக் டொக் டக்
கனவுக் குதிரை செல்லும் சத்தம்
என் உடம்பை எதுவோ ஆட்டியது
கண்களை இம்முறை மெய்யாகவே திறந்தேன்
எனக்கு உயிர் தந்த தாய் பாலுடன் பௌர்ணமியாய்.
வாசல் வந்தேன் என் உடன் பிறந்தவள்
நட்சத்திரங்களை கோலமாக்கியபடி.
பின்னாலிருந்து என்னைக் கட்டிப் பிடித்தபடி
என் உயிர் பகிர்ந்த வெள்ளை ரோஜா
அண்ணார்ந்து பார்த்தேன்.
நிலவு போய் சூரியன் சிரித்தான்
நானும் சிரித்தபடி எத்தனித்தேன்
நிஜமான நினைவுகளுடன் பிரயாணிக்கத் தயாராய்
நினைவுகளுடன்
பொன்னாத்தா !!
ஆழ்ந்த நித்திரை
தீவிரமான நிசப்தம்
டொக் டக் டொக் டக்
நித்திரைக் குதிரை என் வீட்டு வாசலில்
என் ஆத்மாவோ ஆவியோ..எதுவென்று தெரிய வில்லை..
எனை விட்டு மெதுவாக
என் மேனி நோகாமல் பிரிந்து எழுந்தது.
என் கண்கள் திறக்காமல் திறந்தன.
ஆத்மா (எ) ஆவிக்கு "நான்" என்றும்
நித்திரை குதிரைக்கு "கனவு" என்றும் பெயர் சூட்டப் பட்டது.
நான் நடந்து கனவிடம் சென்றேன்.
கனவு கேட்டது .."எங்கு உன்னை இட்டுச் செல்லட்டும்"
நான் சொன்னேன் " நிலவிற்கு"
கனவு குனிந்து அதன் மேலேறச் சொல்லி சமிக்ஞை செய்தது.
என்னை மேலேற்றியது காற்றா கனவா தெரிய வில்லை
இப்பொழுது கனவின் முதுகில் நான்
பஞ்சு மேல் பறப்பதாய்
தென்றல் என் காதோரம் பேசிச் செல்வதாய்
வெள்ளியருவி வீழ்வதாய்
எங்கெங்கும் அற்புதங்கள்
மின்மினிப் பூச்சியாய் விண்மீன்கள்
கண் சிமிட்டியபடி
நிலவு சேர்ந்து விட்டோம்
தெருவெங்கும் பாலாறாய் நிலவு வெளிறிப் போய்.
எத்தனை ஏழைக் குழந்தைகளுக்கு பசியாற்றலாம் - நினைத்தேன் நான்
வெள்ளை ரோஜா தவிர வேறெதற்கும் அனுமதி இல்லை போலும்
எங்கெங்கும் வெள்ளிப் பூக்களாய் வெள்ளை ரோஜாக்கள்
நான் இறங்கி நடந்தேன்..
இல்லை இல்லை கனவுடன் பாலாற்றில் மிதந்தேன்.
அவ்வளவும் அழகாய் கண் விரிய வைக்கும்
ஆச்சர்யமாய்.
எவ்வளவு நேரம் நடந்திருப்பேன் தெரிய வில்லை.
மயக்கம் தெளிந்தவளாய்
ஒரு கணம் நின்றேன். ஏதோ யோசனை
கீழே குனிந்து பார்த்தேன்
பூமிப் பந்து பிரகாசமாய்.
மனதுக்குள் சுருக்கென்று சோகம்.
சட்டென்று நிலவு வெறுத்து விட்டது
திரும்பி நடை போட்டேன்...இம்முறை மிதக்க வில்லை... நடந்தேன்..
கனவு கேட்டது..."என்ன ஆயிற்று"
நான் சொன்னேன் .." நிலவு வெறுத்து விட்டது"
கனவு புருவம் தூக்கிய படி "என்ன? "
நான் : "ஆம் நிலவு ஒரு வெற்று
நிலவு ஒரு போலி
நிலவு ஆடம்பரம்"
நிலவில் அன்பில்லை"
கனவு ." ஏன்...என்ன இல்லை நிலவில்?"
நான் : "மின்மினுக்கும் நட்சத்திரங்களும்
பாலாறாய் சாலைகளும்
வெள்ளியாய் பூக்களும்
வேண்டாமே எனக்கு "
கனவு " என்ன ..இந்த ஆடம்பரம் வேண்டாமா? வேறென்ன வேண்டும் உனக்கு"
நான் " எனை உற்றவன் இங்கில்லை
என் உடன் பிறந்தவள் உடனில்லை
எனக்கு உயிர் குடுத்தவரும் காண வில்லை
என்னிடம் உயிர் பகிர்ந்தவளும் அருகிலில்லை
நிலவில் அன்பும் இல்லை; அரவணைப்பும் இல்லை "
கனவு தலை குனிந்து அமைதி காத்தது
நான் நடையைத் தொடர்ந்தேன்
கனவு விரைந்து முன் வந்து குனிந்து ஏறச் சொன்னது
பறந்து விரைந்தோம்.
டொக் டக் டொக் டக்
கனவுக் குதிரை செல்லும் சத்தம்
என் உடம்பை எதுவோ ஆட்டியது
கண்களை இம்முறை மெய்யாகவே திறந்தேன்
எனக்கு உயிர் தந்த தாய் பாலுடன் பௌர்ணமியாய்.
வாசல் வந்தேன் என் உடன் பிறந்தவள்
நட்சத்திரங்களை கோலமாக்கியபடி.
பின்னாலிருந்து என்னைக் கட்டிப் பிடித்தபடி
என் உயிர் பகிர்ந்த வெள்ளை ரோஜா
அண்ணார்ந்து பார்த்தேன்.
நிலவு போய் சூரியன் சிரித்தான்
நானும் சிரித்தபடி எத்தனித்தேன்
நிஜமான நினைவுகளுடன் பிரயாணிக்கத் தயாராய்
நினைவுகளுடன்
பொன்னாத்தா !!
Monday, December 08, 2008
பெயர் பொருத்தம்
உனக்கு ஏன்
' நிலா'
என்று பெயர் வைத்தேன் ?
மருத்துவச்சி
'அந்த' சந்தோஷ
சங்கதியை
நிச்சயித்த நாள்
முழு பௌர்ணமி
நாள்என்பதாலா ?
ஆர்ப்பாட்டம்
பல கொண்டு
ஆசைகள் நிறை சூழ
அழகே
நீ
பூமி தொட்ட நாள்
குரு பௌர்ணமி நாள்
என்பதாலா?
நாட்கள் பதினைந்தாய்
அழகெறி மெருகூறும் நீ
மீதி பதினைந்தில்
உண்ணாமல் ,
விளையாட்டாய்
உருகி மெலிவாயே
அது தெரிந்ததாலா?
இல்லை ! இல்லை!
உன் ஒளியால்
என் தாய்மையை
ஒளிர வைத்தாலும்
என் வேலை நிமித்தமால்
பல காத மைல்
தள்ளி வசிக்கின்றாயே
அதனாலே தான்!!
கண்ணே!
என் கண்மணியே!!
வருவேன்.
விரைந்து வருவேன்.
அழகாய் ; அறிவாய்
அன்பாய் ஒளிரும்
உனக்கு பெயர்
'சூரியன்' என்றாலும்
வருவேன்
இந்த தாய்
நீ இருக்குமிடம்
விரைந்து வருவேன்.
As i have mentioned in the 'kavithai' there are so many reason why i named her Nila. When i had to take her to the doctor for poor feeding, i blamed myself for naming her Nila. She constantly kept losing weight and she is still like that. Apart from all this she is 8000 miles away from me now.
Hmm...Do you need more reason why i named her Nila?
Ellarum nalla irungappa!!
பொன்னாத்தா
' நிலா'
என்று பெயர் வைத்தேன் ?
மருத்துவச்சி
'அந்த' சந்தோஷ
சங்கதியை
நிச்சயித்த நாள்
முழு பௌர்ணமி
நாள்என்பதாலா ?
ஆர்ப்பாட்டம்
பல கொண்டு
ஆசைகள் நிறை சூழ
அழகே
நீ
பூமி தொட்ட நாள்
குரு பௌர்ணமி நாள்
என்பதாலா?
நாட்கள் பதினைந்தாய்
அழகெறி மெருகூறும் நீ
மீதி பதினைந்தில்
உண்ணாமல் ,
விளையாட்டாய்
உருகி மெலிவாயே
அது தெரிந்ததாலா?
இல்லை ! இல்லை!
உன் ஒளியால்
என் தாய்மையை
ஒளிர வைத்தாலும்
என் வேலை நிமித்தமால்
பல காத மைல்
தள்ளி வசிக்கின்றாயே
அதனாலே தான்!!
கண்ணே!
என் கண்மணியே!!
வருவேன்.
விரைந்து வருவேன்.
அழகாய் ; அறிவாய்
அன்பாய் ஒளிரும்
உனக்கு பெயர்
'சூரியன்' என்றாலும்
வருவேன்
இந்த தாய்
நீ இருக்குமிடம்
விரைந்து வருவேன்.
As i have mentioned in the 'kavithai' there are so many reason why i named her Nila. When i had to take her to the doctor for poor feeding, i blamed myself for naming her Nila. She constantly kept losing weight and she is still like that. Apart from all this she is 8000 miles away from me now.
Hmm...Do you need more reason why i named her Nila?
Ellarum nalla irungappa!!
பொன்னாத்தா
Saturday, October 25, 2008
இன்று பௌர்ணமி!!
இன்று அக்டோபர் 25
என் பிறை நிலவு
முழு மதி ஆனது
ஆம்!
அவளுக்கு வயது
12 மாதங்கள்!!
41 வாரங்களாய்
என் கருவறையை
ஆக்கிரமித்த மகரந்தம்
52 வாரங்களாய்
என் வாழ்வை
புரட்டி போட்ட பூங்கொத்து
சிணுங்கும் மததாப்பு;
இமைத் துடிப்பின் நடுவினிலே
ஆச்சர்யமூட்டும் மின்னல் கீற்று.
அந்த பளிங்கு பௌர்ணமி
பல்லாண்டு பல ஆண்டு
பல கோடி நூறாண்டு
பேரோடும் புகழோடும்
என் பிறை நிலவு
முழு மதி ஆனது
ஆம்!
அவளுக்கு வயது
12 மாதங்கள்!!
41 வாரங்களாய்
என் கருவறையை
ஆக்கிரமித்த மகரந்தம்
52 வாரங்களாய்
என் வாழ்வை
புரட்டி போட்ட பூங்கொத்து
சிணுங்கும் மததாப்பு;
சிரிக்கும் வளையோசை ;
கொஞ்சிக் குலாவிடும்
வெள்ளை நீரோடை .
நொடிக்கொரு
அவதாரம் காட்டும் பட்டாம்பூச்சி .இமைத் துடிப்பின் நடுவினிலே
ஆச்சர்யமூட்டும் மின்னல் கீற்று.
அந்த பளிங்கு பௌர்ணமி
பல்லாண்டு பல ஆண்டு
பல கோடி நூறாண்டு
பேரோடும் புகழோடும்
புன்னகை மறையாமல்
புவியாழ வேண்டுமென்று
வாழ்த்திடலாம் வருவீரே!!!
Sunday, August 24, 2008
பொருள் வழி பிரிந்து....
நீ.....
சொல்லிச் சென்ற காதல் ......
தீண்டிச் சென்ற ஸ்பரிசம்........
தந்து சென்ற முத்தம் .........
எட்டிப் பார்த்த நாணம் ...
கட்டவிழ்ந்த பெண்மை ...
பூட்டி பார்த்த பொன் நகை .....
என்னுள் பசுமையயிருக்க
பசலையால் வாடுகிறேன்.
உன் மடியில் தலை வைத்து....
ஓஅரயிரம் கதைகள் பேசி .....
என் சிணுங்கல் நீ ரசித்து
அண்மையால்
ஆனந்த கண்ணீர் சொரிந்து ...
ஆருயிரே,
உன்னுடன்
உறவு சேர காத்திருக்கின்றேன்...
வெட்கம் பார்க்க,
வெறுமை போக்க ,
வேட்கை தணிக்க
வருவாயா?
வந்தால்...
இம்முறையாவது
உன்னுயிரை,
உன்னுருவை,
உன் நினைவை
என்னுள்
கருவாக்கிச்
செல்வாயா?
இப்படிக்கு
பசலையால் வாடும்
உன் அன்பு மனைவி .
Long back there was an article about the families , where the cheif of the family [son or the husband] works for the Army or abroad [like Muscat or Dubai.] Most of the cases the husbands come home once a year or twice a year.
சொல்லிச் சென்ற காதல் ......
தீண்டிச் சென்ற ஸ்பரிசம்........
தந்து சென்ற முத்தம் .........
எட்டிப் பார்த்த நாணம் ...
கட்டவிழ்ந்த பெண்மை ...
பூட்டி பார்த்த பொன் நகை .....
என்னுள் பசுமையயிருக்க
பசலையால் வாடுகிறேன்.
உன் மடியில் தலை வைத்து....
ஓஅரயிரம் கதைகள் பேசி .....
என் சிணுங்கல் நீ ரசித்து
அண்மையால்
ஆனந்த கண்ணீர் சொரிந்து ...
ஆருயிரே,
உன்னுடன்
உறவு சேர காத்திருக்கின்றேன்...
வெட்கம் பார்க்க,
வெறுமை போக்க ,
வேட்கை தணிக்க
வருவாயா?
வந்தால்...
இம்முறையாவது
உன்னுயிரை,
உன்னுருவை,
உன் நினைவை
என்னுள்
கருவாக்கிச்
செல்வாயா?
இப்படிக்கு
பசலையால் வாடும்
உன் அன்பு மனைவி .
Long back there was an article about the families , where the cheif of the family [son or the husband] works for the Army or abroad [like Muscat or Dubai.] Most of the cases the husbands come home once a year or twice a year.
Subscribe to:
Posts (Atom)
