Tuesday, April 21, 2009

காலத்தை வெல்ல போறேன்!!

ஆமா ஆமா...உங்க யாராலயாவது வியாழக் கிழமையில இருந்து வெள்ளி கிழமை பார்க்காம சனிக் கிழமைக்கு போக முடியுமா...
என்னால முடியுமே.....ஆமா ஆமா இந்த வியாழ கிழமை இரவு நியுயார்க்-ல விமானத்துல ஏறி உக்காந்தேன்னா [அது இந்தியால வெள்ளி கிழமை காலைல நேரம்.] நான் நேர வந்து பாம்பேல இறங்கும் பொது வெள்ளி கிழமை இரவு ஆகிடும்...அப்டின்ன வெள்ளி கிழமை காலைல எங்க போச்சு ?

நான் வெள்ளி கிழமை காலையை ஏமாத்திடுவேனே...
சரி சரி...வேற ஒன்னும் இல்லீங்க...ரெண்டு வாரம் நம்ம ஊருக்கு ஒரு சின்ன பயணம்,,,
உங்க பதிவு பக்கம் வர மாட்டேன்..என் பதிவு பக்கமும் வராதீங்க,,...

மதுரை பக்கமோ சேலம் பக்கமோ எங்கயாவது பொன்னாத்தா மாதிரி இருக்கேன்னு நீங்க நினச்சீங்கன்னா அது நான் இல்லப்பா ..

பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு
பொன்னாத்தா

Wednesday, April 15, 2009

முத்தையா முரளிதரன் !!

இது 2003-ல் நான் வரைந்த ஓவியம்


மடிகிறது தமிழினம்
உடன் சேர்ந்து
எரிகிறது
முத்தையா முரளிதரன்
ஆகும் எங்கள் கனவு


சாம்பலை தின்று செரித்தபடி
பொன்னாத்தா

Sunday, April 12, 2009

My Flash Work 2

என்னோட முதல் Flash work எல்லாரும் பார்த்துருப்பீங்க ...இப்போ உங்கள் பார்வைக்காக, என்னோட பொழுது போக்குக்காக இன்னொன்னு

எல்லாரும் சாமி கும்பிட்டு நல்லா கன்னத்துல போட்டுக்கோங்க...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நெத்தியில் திருநீற்று பட்டையுடன்

பொன்னாத்தா

Saturday, April 04, 2009

எங்கிருந்து வந்தாயடி

-*-
எங்கிருந்து வந்தாயடி..
என்னுயிரில் கலந்தாயடி...
-*-
இமைத் துடிப்பின் நடுவினிலே -
உன் உயிர்த்துடிப்பை உணர்கின்றேன்.
-*-
உயிர்த் துடிப்பாய் இருந்திட்டாய்-நீ
குருதியையும் பங்கிட்டாய்.
-*-
குருதியையும் பங்கிட்டேன்-என்
வாழ்வின் பொருள் உணர்ந்திட்டேன்.
-*-
வாழ்வின் பொருள் உணர்த்திட்டாய் - நீ
வாழ வைத்த தெய்வமன்றோ.
-*-
என் கருவறையில் -உன்னை
கரு என்பதா
கடவுள் என்பதா
சிசு என்பதா -அழகுச்
சிலை என்பதா?
-*-
பொன்னகை தான்
மின்னிடுமோ உன்
புன்னைகை முன்னாலே.
-*-
தென்றலும் தான்
தவித்திடுமோ -உன்
தேகம் தனை தீண்டிடவே .
-*-
பகலவனும் துணிவானோ-உன்
பட்டு மேனி சுடுவதற்கு?
-*-
வெண்ணிலவும்
தேய்ந்ததுவே உன்
பால் கண்கள் கண்டதினால்.
-*-
உயிரே
உறவே
கருவே
திருவே
சிசுவே
சிலையே
எங்கிருந்து வந்தாயடி
என்னுயிரில் கலந்தாயடி
-*-

நிலாவுக்காக ரொம்ப நாள் முயற்சி செஞ்சு கவிதை எதுவுமே உருப்ப்பா வரல...இது கொஞ்சம் பரவ்யில்லாமல் வந்துச்சுன்னு சில மாதங்களுக்கு முன்னாள் பதிவிட்டுருந்தேன்... இப்போ மறுபடியும் எல்லோர் பார்வைக்காகவும்.

கடவுளை உச்சி முகர்ந்தபடி ,,
பொன்னாத்தா