Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, March 23, 2009

திருப்புற சுந்தரி!!

கல்லூரில கூத்தடிக்குறதுக்கு நமக்கு எல்லாம் காரணமா வேணும்...ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு எல்லாம்..இஹ்ஹி இஹ்ஹி தான்....அதுவும் விடுதின்னா கேட்கவே வேண்டாம்..." Study hour"-ல தான் நமக்கு புதுசு புதுசா ஜோக் தோணும்....


தோழி ஒருத்திக்கு [ நம்ம திருப்புற சுந்தரி ] புடிச்ச விஷயம் என்னன்னா எல்லாரோட பேரையும் திருப்பி போட்டு கூப்பிடுறது...அந்த வேலைய அவ கொஞ்சம் கூட பிழை இல்லாம செய்யுவா.....திருப்பின்னா எப்டின்னா...உதாரணத்துக்கு 'தேவி' அப்டிங்குற பேரை 'விதே'; 'கவிதா - தாவிக' ..தாவிக்க தாவிக்கனு கூப்பிட்டா கடுப்பு வராதா? ஷெர்லீயை லீர்ஷெஃ ....சங்கீதாவை தாகீங்ச ...பிருந்தாவைத் திருப்பிப் போட்டா "தாந்த்ருபி"...சில பேரைத் திருப்பி போட்டா நல்லா தான் இருக்கும்...சில பேரைத் திருப்பி போட்டா அந்த பேருக்கு சொந்தக் காரிக்கு காது மூக்கு எல்லாம் புகை வரும்...
இவளோட அட்டகாசம் தாங்க முடியாம எல்லாரும் சேந்து ஒரு முடிவுக்கு வந்தோம்...அவ வழியில அவளை அடக்குறது தான் சரி, எளிதும் கூடன்னு ..





நாங்க அந்த முயற்ச்சியை செயல் படுத்தின அதே நாள்ல அவ எங்களை எல்லாம் திருப்பி போட்டு கூப்பிடுறதை விட்டுட்டா....எப்டின்னு கேக்குறீங்களா... ரொம்ப எளிது....அவ பேரு சீதா....திருப்பி போட்டா என்ன வரும்... அவ்ளோ தான் அம்மணி கப் சிப்..




சீதாவின் நினைவுகளை திருப்பியபடி

பொன்னாத்தா

Friday, March 20, 2009

கணவர்கள் விற்பனைக்கு..



ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" ..


  • முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

  • இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

  • மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு.

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

  • நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

  • நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

  • ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் . எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு.

இது கதையில சொல்லப்பட்ட நீதி...ஆனா இந்த கதை எழுதினவங்களுக்கு நான் சொல்ல நினைக்குறது என்னன்னா, கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இப்டி தான் ஆண்கள் பிதற்றுவார்கள்..அதுக்கப்புறம் எல்லா தகுதியும் காணாம போயிடும்..இதுக்கெல்லாம் மசியுற பெண்மணிகள் நாங்கள் இல்லை.....

அதுனால கனவான்களே வேற ஏதாவது புதுசா முயற்சி செய்யுங்க .

மறந்த மறக்கப்பட்ட பழைய வாக்குகளை அசை போட்ட படி

பொன்னாத்தா

Wednesday, March 11, 2009

மொக்கை கவிஜ- தொடர் பதிவு

தொடர் பதிவுஅழைத்தது தேவா...

நமக்கெல்லாம் நல்ல கவிதை எழுத சொன்னாலே மொள்ளையா தான் எழுத வரும்...இப்டி மொள்ளைக் [ மொக்கை] கவிதை எழுத சொன்ன என்ன தான் வரும்...

நம்ம டாக்டர் தேவா நல்லா தானே இருந்தார்...யாரும் பில்லி சூனியம் வச்சுட்டாங்களா....உச்சா போகும் பொது யுரேகா யுரேகா மாதிரி மொக்கை மொக்கைனு கத்திகிட்டே மொக்கை கவிஜ போட்டு அதுல ஒரு நாலஞ்சு போரையும் இழுத்து விட்ருக்காரு
நல்லா இருங்க சாமி....நீங்களும் உங்க புள்ளைக் குட்டிகளும் நல்லா இருப்பீகய்யா.....நல்லா இருப்பீக...


என்னமோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா என்னோட மொக்கையை உங்கள் மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்குறேன்......அது மொக்கையா இல்ல கரும்பு சக்கையானு நீங்கதேன் முடிவு செய்யணும்....

---------------------------------------------------------------
கருப்புக் கலரு காக்கா பாரு
அதே கலரு அக்கா பாரு
நடந்து போறா ஸோக்கா பாரு
ஜன்னல் வச்ச சொக்கா பாரு
கண்ணாடியை போட்டுப் பாரு
அக்கா இல்ல அப்பத்தா பாரு
வாயைத் திறந்தா பொக்கை பாரு
------------------------------------------------------------

குறிப்பு: இந்த மொக்கை எந்த அக்காவையும், அப்பத்தாவையும் நோகடிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை...முழுக்க முழுக்க என் கற்பனையே....

சரி....இப்போ நான் யாரவது ரெண்டு பேரை இழுத்து போடனுமே....யாருப்பா அது ...பின்னாடி பம்முறது.....

நான் அழைப்பு மணி அமுக்கும் பதிவு வாசல்கள் :
தேவி : வானவில் [ தேவி என் கல்லூரித் தோழி]
நசரேயன் : என் கனவில் தென்பட்டது

மொக்கையை முழுங்கியபடி
பொன்னாத்தா

Thursday, September 11, 2008

Thursday, August 21, 2008

Yaru sandai Kozhi?

First , let me tell you why I named my blog “sandai kozhi”. I don’t want you to think that ponnaththa is a real sandai kozhi……Nijama apdi ellam illenga……[konjam konjam apdi than]….nanga ellam nyayathukkaga koovura sandai seval…hakkam

Athu ennamonga, china vayasula irunthu oru kanmoodi thanamana pazhakkam….yarum ethuvum sollittanganna , athu true or fase-nu parkkama pavadai thooki kattikuttu kekka poyiduven……Athu epdi nee engamma sollalam..athu epdi nee engakka-va thittalam kind of. Ippo 3 kaluthai vayasachu…apdiye than irukkuren……

If we have a get together with firends and family en ootukarar-ku irukura ore payam….”ayyo ponnaththa vaya vachukkitu chumma irukaknume” Avlo thanga intha kozhi piranthu valarntha kathai..