Tuesday, November 29, 2011

புரியாமல் தவிர்த்தவை

ஒவ்வொரு முறை ஊர் பக்கம் போயிட்டு வரும் பொது சில விஷயங்கள் மனசை கஷ்டப்படுத்தினாலும் பல விஷயங்கள் நம்ம பாரம்பரியத்தை நினச்சு பெருமை படவே செய்ய வைக்குது....

சின்ன வயசுல பெரியவங்க எதுவும் சொன்னா ஆமா இந்த கிழவிக்கு வேற வேலை இல்ல..அத செய்யாத இத செய்யாதன்னு நொச்சுகிட்டே இருக்குன்னு சலிச்சுட்டே விட்ருவோம்....ஏன் சொல்றாங்கன்னு ஆராய்ஞ்சு பார்க்குற பொறுமை நம்ம கிட்டயும் இருந்தது இல்ல...எதுக்கு சொல்றோம்னு விவரிச்சு சொல்ற பொறுமை நம்ம பெரிசுங்க கிட்டயும் இருந்தது இல்ல...

இந்த தொடர்ல என்னால முடிஞ்சா வரைக்கும் ஏன் சொன்ன்னாங்க எதுக்கு சொன்னாங்கன்னு எனக்கு எட்டின வரைக்கும் கிணறு தோண்டி பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்....உங்களுக்கு தப்பா தெரிஞ்சா திருத்துங்க ..சரின்னு பட்டுச்சுன்னா உங்க வீட்டு பொடுசுங்க கிட்ட பொறுமையா சொல்லுங்க....




புரிய வைக்க,
பொன்னாத்தா

Monday, August 10, 2009

Creativity / Recycle

என்ன மக்கா எல்லாரும் நல்லா இருக்கீங்கல்ல...நல்லா தான் இருப்பீங்க...

இந்த பக்கம் எட்டி பார்க்க கூட நேரம் இல்ல.....கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க...பதிவு போடுறதையும் பின்னூட்டம் போடுறதையும் முழு நேர வேலை ஆக்கிடுறேன்...
உங்க வீட்டு ஆணி எங்க வீட்டு ஆணி இல்லீங்க...ஊர்ப்பட்ட ஆணியை , துருப்புடிச்ச ஆணியை செம்மை பார்த்துட்டு இருக்கேன் ... .அதுனால மக்கள் எல்லாம் தயவு செஞ்சு கோச்சுக்க கூடாது சரியா....


இதுல நான் பெத்த மகராசி வீட்டுக்கு வந்து ஒரு ஆசைக்கு கணினியை தொட்டா கூட.....என்ன செய்யுற....ஏன் செய்யுற....எதுக்கு செய்யுற.. நீ மட்டும் தான் செய்வியா....நான் செய்ய கூடாதா...அது ஏன்?.....இம்புட்டு கேள்விக்கு பயந்து நான் அந்த பக்கம் தலை கூட வச்சு படுக்கலைங்குறேன்....

சரி இப்போ மட்டும் என்னத்துக்கு வந்தன்னு கேக்குறீகளா...
சும்மா நம்மளை யாரவது சுகம் விசரிசுருக்காகலன்னு எட்டி பார்த்தா, புதுசா நாலு பேரு நலம் விசரிச்சுருந்தங்க...என்னடா அதிசயமா இருக்கேன்னு அலசிப் பார்த்தா தான் தெரிஞ்சது,.....நம்ம பழமை அண்ணாச்சி நம்மளை அறிமுகம் செஞ்சு வச்சுருக்காக...வலைசரத்துல....நல்லதுங்கன்னே...


சரி வந்தததுக்கு தலைப்புக்கு ஏத்த மாதிரி என்னத்தையாவது சொல்லனும்ல..சொல்லிட்டு போறேன்...
நம்ம மக்கள் creativity-க்கு ஒரு அளவே கிடையாதுங்க.....நான் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் வெறும் வாயை மெல்லுறது கிடையாது....அட..வாயில சூயிங்கம் போட்டு தான் மெல்லுவென்னு சொல்றேன்...
ஊர்ல இருக்கும் பொது நான் சூயிங்கும் திங்கும் போதெல்லாம் பக்கத்து வீட்டு ஆச்சி வந்து..."தாயீ...நீ நல்லா மென்னுட்டு துப்பிடாத...எனக்கு குடு தாயீ" அப்படிம்பாக....ச்சே....அது எதுக்கு உங்களுக்குன்னு கேட்டா...பிளாஸ்டிக் குடத்துல சின்ன ஓட்டை இருக்கு....ஓட்டை அடைக்குறவன் அஞ்சு ரூவா சொல்லுவான்.....இந்த சூயிங்கம் ஒரு நாலு நாள் தாங்கும் தாயீ...அதான் கேட்குறேன்ம்பாக.....அட..இது கூட நல்லா இருக்கே.....


ஏத்தா ஆச்சி...நான் உனக்கு புதுசா ஒன்னு வாங்கி தரேன்...நீயே மென்னு நீயே ஒட்டிக்கோன்னு சொன்னேன்.....அதுக்கு அவங்க ..எ போடி கிருக்கச்சி...நானே பல்லு இல்லாத கிழவி..நான் எப்போ அத மென்னு...துப்பி...;போ...கீழ போடுற கழுதைய என்கிட்டே குடுன்னா...குடுத்துட்டு போயேன்....
எல்லாம் என் நேரம்த்தா..என் நேரம்...ஐயோ, கிழவி நம்ம எச்சியை கைல தொட வேண்டாம்னு பார்த்த நீ ரொம்ப தான் பேசுற...சரி இந்தா போ.....அறையும் குறையுமா தின்ன சூயிங்கம் ஒரு நாலு நாள் அவங்க குடத்துல ஓட்டிகிட்டு இருந்துச்சு.....
என்ன இதை Creativity-ன்னு சொல்றதா...இல்ல Recycling-நு சொல்றதா...நீங்களே சொல்லுங்க
வந்ததுக்கு ஏதோ மொக்கைய போட்டாச்சு..வர்ட்டா


வெறும் வாயை மென்னபடி
பொன்னாத்தா


Wednesday, June 24, 2009

வாய் சொல்லில் வீரரடி...


"அவன் நல்லாவே இருக்க மாட்டான்.." இப்படி நீங்க யாரையாவது திட்டி இருக்கீங்களா?..நான் திட்டினேன்..

ஊருக்கு போயி ரெண்டு வாரமும் எந்த ஒரு தொல்லையும் இல்லாம சந்தோஷமா தான் போச்சு. எல்லாருக்கும் ஒரு வருஷம் கழிச்சு பார்ப்போம்னு கண்ணீரும் கம்பலையுமா TATA சொல்லிட்டு பெங்களூரு விமான நிலையத்துக்கும் பிரச்சனை இல்லாம வந்து சேர்ந்தாச்சு..

பயண சீட்டு வாங்கும் போது, சரி.... யாருக்கோ போக போற காசு இந்திய அரசாங்கத்துக்கு போகட்டுமேன்னு "AirInida -ல வாங்கினோம்.
.இந்தியாவில போயி இறங்கி .மும்பை விமான நிலையத்து பார்த்ததும் ஆஹா என்னடா இது மீன் சந்தை மாதிரி இருக்கே..தப்பு பண்ணிட்டோமோன்னு இருந்துச்சு ..

திரும்பி போகும் பொது எனக்கும் கணவருக்கும் என்னமோ தப்பு நடக்க போகுதுன்னு தோணிட்டே இருந்துச்சு///

எங்களுக்கு பெங்களூருல இருந்து மும்பை போயி சேர்ர விமானத்துக்கும் நியுயார்க் கிளம்புற விமானத்துக்கும் நடுவில மிக குறைந்த நேரமே இருந்துச்சு...சரி நம்ம ஆளுங்க ஜமய்ச்சுடுவாங்க..நம்மளை நேரா கொண்டு போயி உக்கார வச்சுடுவாங்கன்னு பெரிய நம்பிக்கைல மும்பைல போயி இறங்கினோம்..

இறங்கினதும் நியுயார்க் போற பயணிகள்னு பெரிய பெயர் பலகை வச்சுகிட்டு நின்னாங்க..அட..இங்க பாருடா வரவேற்ப்பைன்னு நினச்சுகிட்டு "WE are flying to NY"-நு பீட்டர் விட்டேன்..

Oh நீங்க தான அது..உங்க விமானம் கிளம்பிடுச்சு..அதுனால நீங்க நாளைக்கு தான் போக முடியும்னு அந்த குண்டு அம்மணி தினாவட்டா சொல்லுச்சு..

எனக்கு சொல்லியா குடுக்கனும....விர்ர்னு ஏறுச்சு...இது என்ன கொஞ்ச கூட பொறுப்பு இல்லாம ரொம்ப ஈசியா சொல்ற...இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ..எனக்கு தெரியாது..என்னை எப்டியோ கொண்டு போயி சேருன்னு சொன்னேன்.

என்னாச்சுன்னா ...சென்னை அல்லது பெங்களூர்ல இருந்து போகும் பொது உங்களை ஒன்னு Domestic இல்லன்ன International விமான தளத்துக்கு கொண்டு போவாங்க.....நாங்க பயண சீட்டு வாங்கும் போதே 78 தடவை கேட்டோம்...எங்க போகுதுன்னு....எல்லாவனும் சொல்லிக் குடுத்த மாதிரி உங்க விமானம் International தான் போகுதுன்னு சொன்னானுங்க...

இதுக்கு மேல நான் என்ன துப்பு துலக்குற ஏஜென்சி வச்ச விசாரிக்க முடியும்.நம்ம பெய புள்ளைக மேல நம்பிக்கைய போட்டு வந்து பார்த்தா துபாய்ன்னு சொல்லி கேரளாக்கு கொண்டு போன மாதிரி International சொலி Domestic-ல கொண்டு வந்து விட்டாங்க...

சரி இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ..எப்டியாவது போயிடலாம்னு சொல்லி பஸ்ல ஏறி உக்காந்தோம்...எனக்கு இருந்த லோ பிரஷர் எல்லாம் அன்னிக்கு சரியா போச்சு..அந்த பஸ்காரன் Domestic-ல இருக்குற எல்லா பயணிகளையும் நலம் விசாரிச்சு எங்களை கொண்டு வந்து விடும் பொது எங்களுக்கு அரை மணி நேரம் தான் இருந்துச்சு......

நேரா AirIndia manager கிட்ட போனேன்/....."Hello I have an emergency"-ன்னேன்

ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கன்னார் ....அடேய் என்னங்கடா விளையாடுறீங்களா ...என் விமானம் இன்னும் அரை மாநில போக போகுது..நான் emergencyனு சொல்றேன்...5 நிமிஷங்குரன்னு கத்த ஆரம்பிச்சேன்...

அந்த ஆளும் கடுப்பாயிட்டான்....இங்க பாருங்க...இந்த குறைந்த இடைவெளில என்னால ஒன்னும் பண்ண முடியாது.....என்ன பண்ணனுமோ பண்ணிக்கொங்க...

நான் ஒரு airline ஊழியர்ந்குரதுனால எனக்கு ஒரே ஆச்சர்யம்..எப்டி ஒரு வாடிக்கையாளர் கிட்ட இப்படி பேச முடியும்? நான் சொன்னேன்...இனிமே என் வாழ்க்கைல AirIndia-la ஏறவே மாட்டேன்னு...அதுக்கு அந்தா ஆள் சொல்றான். அது உங்க இஷ்டம் மேடம் அப்டின்னு.....இப்படி கூட இருப்பாங்களான்னு நான் வாய் அடச்சு போயிட்டேன்....நான் அங்க கழுதை மாதிரி கத்துறதை ஒரு ஊரே பார்த்துச்சு..

அப்புறம் அந்த மேலாளர் வந்து எங்கள தாஜா பண்ணி ஹோட்டல் ரூம் போட்டி குடுத்து மறு நான் வர சொன்னது வேற கதை.....

இப்போ நம்ம கத்தியோட கரு இனிமே தான்...

மறு நாள் 2 மணி நேரம் முன்னாடியே வந்துட்டோம்...எங்க கிட்ட அமெரிகாக்குள்ள நுழைய தேவையான எல்லா Documents இருந்துச்சு...

வரிசைல நின்னோம்....எங்க முறை வந்தததும் ஒரு கேன கிறுக்கன் கிட்ட போயி மாட்டினோம்....இந்த Immigration officers என்னமோ கடவுள்னு நினைப்பு ....முகத்தை இறுக்கமா வச்சுகிட்டு நாம எல்லாம் என்னமோ கிரிமினல்ஸ் மாதிரி தான் நம்ம பாஸ்போர்ட் பார்ப்பாங்க

அந்த ஆள் ஒன்னு ஒண்ணா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்டான்...எங்க படிச்ச...உங்க ஊர்ல இருந்து அந்த ஊர் எவ்ளோ தூரம் இந்த ஊர் எவ்ளோ தூரம் அப்டின்னு...நானும் மனசுக்குள்ள அடேய்..நான் என்ன highway contract-எ எடுத்துருக்கேன்.....அப்டின்னு வஞ்சுகிட்டு பதிலை சொன்னேன்...

சரி அதெல்லாம் இருக்கட்டும்..போலீஸ் verification லெட்டர் இருக்கா?அப்டின்னு கேட்டான் ...நாங்க விடுமுறைக்கு தானே வந்துருக்கோம்..அதுவும் ரெண்டு வாரம் தானே வந்துருக்கோம்...எதுக்கு போலீஸ் லெட்டர் வேணும்னு நான் கேட்டேன்

அந்த கேள்வி எலாம் என் கிட்ட கேக்காதீங்க ...இருக்கா இல்லையா?..இது அவன்


நான் சொன்னேன்...அது தேவைன்னு எனக்கு தெரியாது.. யாரும் கேட்டது இல்ல...

அவன் : அப்படின்னா உங்களை அனுப்ப முடியாதே...என்ன பண்ணலாம்

அதுக்குள்ளே எங்க வீட்டுக்காரர் ....சார் , நாங்க ஏற்கனவே ஒரு நாள் மிஸ் பண்ணிட்டோம்...எப்டியாவது போகணும் சார்.

நம்ம ரமணா பட dialog தான் ஞாபகம் வந்துச்சு....எப்டியாவது காப்பாத்திடுங்க சார்.

அவன் : உங்களை நான் அனுப்பணும்னா ரிஸ்க் எடுத்து தான் அனுப்பனும்....என்ன பண்ணலாம்...

எனக்கு அப்போ தான் பொறி தட்டுச்சு....ஓஹோ இவன் பிச்சை எடுக்குற சாதி போல இருக்கேன்னு

அவன் தொடர்ந்தான் :..சரி நேரடியா கேக்குறேன்...எவ்வளோ குடுக்க முடியும் உங்களால...

[இந்த உரையாடல் எல்லாமே தமிழ்ல நடந்துச்சு...நாங்க தமிழர்கள்ன்னு தெரிஞ்சுகிட்டு தான் இந்த மிரட்டல்..அவன் பெங்களூர் காரன் தமிழ் தெரிஞ்சது வசதியா போயிடுச்சு அவ்னுக்கு ]

அவன் : ஒரு அம்பது டாலர் குடுங்க ...நான் போட்டு குடுத்துடுறேன்...ஆனா அடுத்த தடவை வரும் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து வாங்கன்னு......

கரிசனம் அய்யாவுக்கு எங்க மேல...

அதென்ன அம்பது டாலர்னா அவ்ளோ சாதரணமா.....அந்த அம்பதை வச்சு நான் ரெண்டு வாரத்துக்கு சாப்பிடுவேன்....

என் வீட்டுக்காரர் என்கிட்டே டாலர் இருக்கான்னு தெரியல....இருங்க பாக்குறேன்னு...ரெண்டு பெரும் கீழ உக்காந்து குசுகுசுன்னு பேசினோம்...எனக்கு ஆத்திரம் ஆதங்கம்..இயலாமை .....அப்டியே கத்தி ஊரை கூட்டிடலாமன்னு இருந்துச்சு

சரின்னு ஒரு 1500/- எடுத்து நீட்டினோம்....அவன் பதில் எதுவும் பேசல...வாங்கிட்டு சிரிச்சுட்டு நல்லபடியா போயிட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சான்

திட்டிகிட்டே வந்தேன்....பார்த்துகிட்டே இரு இந்த காசை நீ உருப்படியா செலவழிக்க முடியாது....உனக்கு வாந்தி பேதி தான் வர போகுதுன்னு...

இப்படி எல்லாம் சம்பாதிச்சு தான் இவங்க எல்லாம் ஊரெல்லாம் இடம் வாங்கி போடுறாங்களோ...எப்டி இவங்களால நிம்மதியா துங்க முடியும்...

இதெல்லாம் விட...அந்த ஆளை இழுத்து போட்டு கேள்வி கேக்க முடியலியேன்னு தான் எனக்கு வருத்தம்....வெளிய தான் வாய் நீளுது...ஒன்னும் செயல்ல காமிக்க காணும்...

இங்கே வந்து இந்த கதைய சொன்னப்போ என்னோட பங்களாதேஷ் நண்பனுக்கும் இதே கூத்து நடந்துருக்கு கேட்டதும் தூக்கி வாரி போட்டுச்சு...அவன் immigration check எல்லாம் அவன் ஊர்லே முடிச்சுட்டு....connecting flight-க்காக மும்பை வந்துருக்கான்...அங்க அவனை மிரட்டி காசு வாங்கிருக்காங்க...எங்க இருந்து வருது இவங்களுக்கு தைரியம்....நாம பேச மாட்டோம்னு நம்பிக்கையா...ல்லை எங்க முஞ்சில எழுதி ஒட்டிருக்கா..கேளுங்கள் தரப்படும்னு


இருடி...அடுத்த தடவை இருக்கு உனக்கு....


இப்டி தான் நம்ம சுயநலத்துக்காக நாட்டை நாசப் படுத்துகிறோம்... ஒரு குறு குறுப்பு இருக்க தான் செய்யுது...

இனிமே எந்த காரணத்தைக் கொண்டும் இந்த மாதிரி மனுஷங்களை விட்டு வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் ....

வாயைப் பொத்திக் கொண்டு
பொன்னாத்தா

Sunday, June 14, 2009

வந்துட்டோம்ல....விட்ருவோமா

தெரியுமே...கொஞ்ச நாள் எல்லாரும் ரொம்ப நிம்மதியா இருந்துருப்பீங்களே..


பொன்னாத்தா போடுற மொக்கையும் இல்ல...அதுக்கு கமென்ட் போடுற தொல்லையும் இல்லைன்னு நிம்மதியா சந்தோஷமா ...
அது எப்டி...விட்ருவோமா...வந்துட்டோம்ல....


ஊருக்கு போனாளே..போனவ வந்தாளா? கேக்க ஒரு நாதி இல்லை.....இருந்தாலும் நாங்க வருவோம்ல...சூடு? சுரணை?....அப்டின்னா?


சரி சரி...உங்க பதிவு எல்லாம் படிக்காம போனதும் தப்புத்தேன் தப்புத்தேன்...
சரிக்கு சரியா போச்சு...பழம் போட்ருவோம்..சரியா...

இனிமே ஓவர் டைம் போட்டாலாவது எல்லார் பதிவையும் படிக்குறதா முடிவு பண்ணிட்டேன்...என்ன நல்ல முடிவு தானே...


வர்ட்டா ..


- பொன்னாத்தா -

Tuesday, April 21, 2009

காலத்தை வெல்ல போறேன்!!

ஆமா ஆமா...உங்க யாராலயாவது வியாழக் கிழமையில இருந்து வெள்ளி கிழமை பார்க்காம சனிக் கிழமைக்கு போக முடியுமா...
என்னால முடியுமே.....ஆமா ஆமா இந்த வியாழ கிழமை இரவு நியுயார்க்-ல விமானத்துல ஏறி உக்காந்தேன்னா [அது இந்தியால வெள்ளி கிழமை காலைல நேரம்.] நான் நேர வந்து பாம்பேல இறங்கும் பொது வெள்ளி கிழமை இரவு ஆகிடும்...அப்டின்ன வெள்ளி கிழமை காலைல எங்க போச்சு ?

நான் வெள்ளி கிழமை காலையை ஏமாத்திடுவேனே...
சரி சரி...வேற ஒன்னும் இல்லீங்க...ரெண்டு வாரம் நம்ம ஊருக்கு ஒரு சின்ன பயணம்,,,
உங்க பதிவு பக்கம் வர மாட்டேன்..என் பதிவு பக்கமும் வராதீங்க,,...

மதுரை பக்கமோ சேலம் பக்கமோ எங்கயாவது பொன்னாத்தா மாதிரி இருக்கேன்னு நீங்க நினச்சீங்கன்னா அது நான் இல்லப்பா ..

பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு
பொன்னாத்தா

Wednesday, April 15, 2009

முத்தையா முரளிதரன் !!

இது 2003-ல் நான் வரைந்த ஓவியம்


மடிகிறது தமிழினம்
உடன் சேர்ந்து
எரிகிறது
முத்தையா முரளிதரன்
ஆகும் எங்கள் கனவு


சாம்பலை தின்று செரித்தபடி
பொன்னாத்தா

Sunday, April 12, 2009

My Flash Work 2

என்னோட முதல் Flash work எல்லாரும் பார்த்துருப்பீங்க ...இப்போ உங்கள் பார்வைக்காக, என்னோட பொழுது போக்குக்காக இன்னொன்னு

எல்லாரும் சாமி கும்பிட்டு நல்லா கன்னத்துல போட்டுக்கோங்க...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நெத்தியில் திருநீற்று பட்டையுடன்

பொன்னாத்தா