Showing posts with label நல்ல விஷயம். Show all posts
Showing posts with label நல்ல விஷயம். Show all posts

Tuesday, November 29, 2011

புரியாமல் தவிர்த்தவை

ஒவ்வொரு முறை ஊர் பக்கம் போயிட்டு வரும் பொது சில விஷயங்கள் மனசை கஷ்டப்படுத்தினாலும் பல விஷயங்கள் நம்ம பாரம்பரியத்தை நினச்சு பெருமை படவே செய்ய வைக்குது....

சின்ன வயசுல பெரியவங்க எதுவும் சொன்னா ஆமா இந்த கிழவிக்கு வேற வேலை இல்ல..அத செய்யாத இத செய்யாதன்னு நொச்சுகிட்டே இருக்குன்னு சலிச்சுட்டே விட்ருவோம்....ஏன் சொல்றாங்கன்னு ஆராய்ஞ்சு பார்க்குற பொறுமை நம்ம கிட்டயும் இருந்தது இல்ல...எதுக்கு சொல்றோம்னு விவரிச்சு சொல்ற பொறுமை நம்ம பெரிசுங்க கிட்டயும் இருந்தது இல்ல...

இந்த தொடர்ல என்னால முடிஞ்சா வரைக்கும் ஏன் சொன்ன்னாங்க எதுக்கு சொன்னாங்கன்னு எனக்கு எட்டின வரைக்கும் கிணறு தோண்டி பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்....உங்களுக்கு தப்பா தெரிஞ்சா திருத்துங்க ..சரின்னு பட்டுச்சுன்னா உங்க வீட்டு பொடுசுங்க கிட்ட பொறுமையா சொல்லுங்க....




புரிய வைக்க,
பொன்னாத்தா

Friday, February 27, 2009

குப்பைத் தொட்டி மனிதர்கள்

இது எனக்கு இ மெயிலில் ஆயிரக்கணக்கான ஃபார்வேர்டு பொத்தான்கள் அமுக்கப்பட்ட பிறகு வந்து சேந்துச்சு....படிச்சதும் என்னமோ ரொம்ப உண்மைன்னு தோணுச்சா..அதுனால சரி நம்ம மக்கள் கிட்ட பரிமாரிக்கலாமேன்னு...
[என்னமோ ஆயிரக்கானவங்க வந்து பதிவு படிச்சுட போற மாதிரி நினைப்புத் தேன் ...]
-----------------
ஒரு நாள் நண்பி ஒருத்தி வாடகை மகிழுந்துல ஏறி விமான தளத்துக்கு போறதுக்காக போயிட்டு இருந்தா....மகிழுந்து ஓட்டுனர் மிகவும் ஜாக்கிரதையா நிதானமா வண்டி ஓட்டிட்டு இருந்தார். திடீர்னு ஒரு பொந்துக்குள்ள இருந்து வந்த மாதிரி சந்துக்குள்ள இருந்து வந்துச்சு இன்னொரு மகிழுந்து ..
அப்டியே பிரேக் மேல ஏறி நின்னு இழுத்துப் பிடிச்சு ரெண்டு வண்டிக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாம நண்பியோட வண்டி ஓட்டுனர் வண்டியை நிறுத்திட்டார்.
இவர் வண்டிக்கு எந்த ஒரு சேதமும் குடுக்காம கிளம்ப எத்தனிக்கும் போது அந்த இன்னொரு ஓட்டுனர் வசை பாட ஆரம்பிச்சுட்டார். என் தோழிக்கு பயங்கர கடுப்பு....சரி ஊர் பேர் தெரியாத ஊர்ல நமக்கு ஏன் வம்புன்னு இவ வாயில ஸிப் இழுத்து போட்டா...

இருந்தாலும் இவளோட ஓட்டுனர் எதுவுமே நடக்காம ரொம்ப சாதரணமா இருந்தது பார்த்து இவளுக்கு ஆச்சர்யம்.அவர் கிட்டயே கேட்டா " என்னங்க..அந்த ஆள் தப்பும் பண்ணிட்டு என்னமோ நீங்க தான் தப்பு பண்ண மாதிரியும் அவன் ஏதோ லார்டு லபக்கு தாஸ் மாதிரியும் பேசுறானே..உங்களுக்கு கோபம் வரலியான்னு"...அதுக்கு ஓட்டுனர் சொல்லிருக்கார்...." கோபம் எல்லாம் வரலீங்க...எனக்கு அந்த ஆளை பார்த்தா பாவமா தான் இருக்கு...இவரை மாதிரி நம்மளை சுத்தி நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க ...இவங்க எல்ல்லாம் குப்பை வண்டி மாத்ரிங்க ..தினமும் கோப தாபங்க, ஏக்கம், இயலாமை, எரிச்சல் எல்லாத்தையும் சேர்த்து சேர்த்து வச்சுட்டு இருப்பாங்க....குப்பை வண்டி நிறைஞ்சதும் இறக்கி வைக்க இடம் தேடுவாங்க......நம்மளை மாதிரி ஆளுங்க மேல கொட்டி விட்டு போயிடுவாங்க நாம அவர் பேசினதுக்கு பதில் பேசினா நம்ம அவர் குப்பைய அள்ளுற மாதிரி ஆயிடும்...தூசி தட்டி விட்டா மாதிரி இதையும் தட்டி விட்ட போனா தான் நமக்கு நல்லது...இல்லன்னா இந்த குப்பையை அள்ளிட்டு போயி நாம வீட்ல நம்ம பிள்ளை குட்டிங்க இல்லாட்டி அலுவலகத்துல நம்ம கூட வேலை பாக்குறவங்க மேல கொட்டிடுவோம்.."

அப்போ தான் என் மர மண்டை நண்பிக்கு தோணிருக்கு..ஆஹா...எம்புட்டு பெரிய விஷயத்தை இவ்ளோ சாதரணமா சொல்ராறேன்னு....

---------------------- -----------------------------------------------------------------------

சரி....என்ன தான் சொல்ல வர்றன்னு நீங்கள்லாம் இடத்தை விட்டு எந்திருக்குறது தெரியுது....முடிச்சுடுறேன்..முடிச்சுடுறேன்..
# எக்காரணத்தைக் கொண்டும் உங்க மேல குப்பையை கொட்ட விடாதீங்க
#இருக்க போறது கொஞ்ச நாள்...அதுல ஏன் காலங்காத்தால எந்திரிக்கும் போதே குப்பை மூஞ்சியோட எந்திரிக்கனும்?
#உங்களை நல்ல படிய மதிக்குரவங்களை நீங்களும் மதிச்சு நடந்துக்கோங்க...
#உங்களை கேவலமா நடத்துரவங்களை மன்னிச்சு மறந்துடுங்க....[ போன வருஷ performance-க்கு review சரியா குடுக்காத மேலாளரையும் மன்னிப்போம்.மறப்போம்...]
#Life is ten percent what you make it and ninety percent how you take it!



சரி....எனக்கு ஒரு சந்தேகம்.....இப்போ என் கிட்ட இருக்குற குப்பையை கொட்டலாமா கூடாதா ? ...அவ்வ்வ்வ்வ்வ்வ்

குப்பையுடன்
பொன்னாத்தா

Sunday, February 22, 2009

Way to Go India!!


....இந்தியாவுக்கே பெருமை வாங்கி தந்த ரஹ்மானுக்கு ஒரு பெரிய ஓஓஓ என்ன ஒரு சந்தோசம்....அப்பா...என் கால் தரைல நிக்கல....எனக்கே இப்டி இருந்துச்சுன்னா அவங்க குடும்பத்தில எல்லாரும் எப்டி குதிச்சுருப்பங்க?


திறமை என்னிக்குமே வீண் போகாதுங்குறது உண்மை தானே?


வேற எந்த ஊர்ல அயல் நாட்டுகாரங்களை கூப்டு விருது குடுக்குறாங்க....இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் தான் பார்க்க முடியும்


நல்ல முறையில் தகுந்தவர்களை தேர்வு செய்ததற்கு ஆஸ்கர் அகேடமிக்கும் நன்றி நன்றி
ஏங்க..வேற யாரவது ஒரே வருஷத்துல ரெண்டு ஆஸ்கர் வங்கிருக்கங்களா ..இல்ல தானே?....அப்போ ரெட்டை மடங்கு சந்தோசம்....


இந்த நல்ல வாய்ப்பை குடுத்ததற்கு டைரக்டர்க்கும் நன்ற சொல்லணும்....


ஐயோ...என்ன என்னமோ சொல்லனும்னு இருக்கே...என்ன எழுதுறதுன்னு தெரியலியே


வாழ்த்துக்கள் ரஹ்மான்.....வாழ்த்துக்கள் இந்தியா

Wednesday, December 10, 2008

அரசியல்!! இந்திய அரசியல் !!

இது நம்ம சகோதரி சந்தன முல்லை அவர்களின் பதிவில் இருந்து எடுக்கப்பட்ட வரி...
//யாராவது நமது பிள்ளைகள் அரசியலுக்குப் போகிறேன் என்றால், நாம் முதலில் செய்வது அட்வைஸ். படிச்சு, நல்ல வேலைக்கு போகிற வழியைப் பாரு!//

நான் இந்த கோஷ்டி இல்லேங்க...என்னோட பொண்ணு ஒரு பெரிய அரசியல்வாதி ஆகனும்குறது தான் என்னோட ஆசை......எனக்கு இந்திய அரசியல் பிடிக்காது...ஆனா, உலகத்துல இருக்குற பல பெண் அரசியல்வாதிகள் பார்த்து ஆச்சர்ய பட்ருக்கேன்.

நம்ம தாய் நாட்டுக்கு இருக்குற ஒரே குறை, படித்த சுய நலம் இல்லாத அரசியல்வாதிகள். நாமலே அந்த விதை போட மறுத்தோம்னா நம்ம தாய் மண்ணை வேற யார் காப்பாத்துவா?

வரலாறு, புவியியல் -நு ஏன் தான் நம்ம பிள்ளைங்களை தேவை இல்லாத பாடங்களை படிக்க வைக்குறாங்கன்னு நிறைய பெற்றோர்கள் புலம்புவதை கேட்டு இருக்குறேன்/ ...என்னோட வரலாறு ஆசிரியை தான் எனக்கு புரிய வச்சாங்க.....பின்னாடி காலத்ததுல ஒருத்தர் கணித மேதையா வரலாம். இன்னொருத்தர் அறிவியல் மேதையா வரலாம். தமிழ் அறிஞரா வரலாம்/ யாரு என்னவாக போறங்கன்னு தெரியாது...அதுனால தான் எல்லாருக்கும் எல்லாமே சொல்லித் தர்ராங்கன்னு///

வாஸ்தவமான பேச்சு தானே?
நம்மல்ல பாதி பேருக்கு கணக்குன்னா கஷாயம் குடிக்குற மாதிரி தான். ஆனா நம்ம பள்ளிக்கொடத்துல காலைல 8 மணிக்கு வாய்ப்பாடு படிச்துனால தானா இன்னிக்கும் 8 x 9 எவ்ளோ-நு கேட்டா 72-நு யோசிக்காம சொல்ல முடியுது......[ தலைமை ஆசிரியர் கிட்ட என் பக்கத்துல உக்காந்து இருந்த பையன் பிரம்படி வாங்கினது இன்னும் வாய்ப்பாடு போலவே பசுமையா ஞாபகம் இருக்கு ...] :(

எனக்குள்ளும் ஒரு அறை குறை கவிதை வித்து இருக்குன்னு 12-ம வகுப்பில தான் எனக்கே தெரியும்.......தமிழ் பரிச்சைக்கு கதை அல்லது கவிதை எழுதனும்.....வகுப்பில் முதல் ஆளா பேப்பர் குடுத்துட்டு வெளிய வரணும்னா கவிதை தான் சுலபம்,....அப்போ கிறுக்க ஆரம்பிச்சது தான் என்னோட கவிதை ....உங்களுக்கு என் கவிதைகள் பிடிக்குதோ இல்லியோ, அதுக்கு நான் இந்திய அரசியல் திட்டத்தை பாராட்டிக்கிட்டு தான் இருக்கிறேன் ....

எல்லாமே சொல்லித் தர்ற நம்ம இந்திய பாடத் திட்டத்துல ஏன் அரசியல் ஒரு பாடமா இல்ல....அரசியல் நுணுக்கங்கள் ஏன் சொல்லி தர படுறது இல்லை....

ஏனென்றால், இந்தியால அரசியல் பண்றதுக்கு உனக்கு எந்த ஒரு தகுதியும் தேவை இல்லை.......

-கல்லூரி போயி பட்டம் வாங்கின அரசியல்வாதிகள் எத்தனை பேர்?

-ஒரு தாரம் ; ஒரே ஒரு வீடு- எத்தனை அரசியல்வாதிகள் ?

-எத்தனை பேருக்கு தேசிய மொழியான ஹிந்தி தெரியும்?இவங்க எல்லாம் பார்லிமென்ட் போயி என்னத்த பேசி கிழிக்குறாங்க? நாமளும் இவங்களை நம்ம பிரதிநிதியா வரிப்பணம் கட்டி முதல் வகுப்பு கோச்-ல அனுப்பி வைக்குறோம்.

தேசிய மொழியை நம்ம மாநிலதுக்குள்ள அனுமதிக்க மாட்டோம்னு சொன்னதே பெரிய முட்டாள் தனம்....தமிழ் நாடு விட்டு வெளிய வந்த தமிழன் மட்டும்தாங்க தேமேன்னு முழிச்சுட்டு நிக்குறான். உலக மொழி ஆங்கிலம் ...அது மட்டும் அனுமதிப்பாங்களா?


இதை எல்லாம் குறை சொல்லி எழுதுற எத்தனை பேர் அந்த தப்பை சரி செய்ய முன் வருகிறோம்......நம்ம பிள்ளைங்க அரசியல் படிக்கலைன்னா இருக்குற கேன கிறுக்கு அரசியல் வாதிகளின் வாரிசுகள் தான் நாளைக்கு நம்ம தலையை ஆட்டுவிக்கும்.

இது மன்னர் ஆட்சி அல்ல.....மக்கள் ஆட்சி....நம் வாரிசுகள் சுயம் நலம் இல்லாமல்,2020-ல் இந்தியாவை உயர்த்த முன் வந்தால் தயவு செய்து தட்டி குடுங்க.....


அரசியல்வாதிகளுக்கு என்ன தகுதி இருக்கணும்?

-ஒரு வருட காலம் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்

-தாய் மொழி, தேசிய மொழி, உலக மொழி மூன்றிலும் எழுத படிக்க தெரிந்துருக்க வேண்டும்
-சொத்து விவரங்கள் ஆட்சிக்கு முன்பும் பின்பும் அதிக வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரிய வந்தால், தூக்கு தண்டனைக்கு சம்மதிக்குறேன்னு கையொப்பம் இட தயாராக இருக்க வேண்டும்


இதை எல்லாம் நான் 20 சினிமாவில பண்ணிருக்கேன்னு சொன்னா என்னங்க பண்றது இவங்களை யெல்லாம்

அய்யா சாமி திருந்துங்கையா....நீங்களும் நல்ல இருப்பேங்க...எங்க பிள்ளை குட்டிகளும் நல்ல இருக்கும்...

அய்யா சாமி.....நல்ல அரசியல்வாதிகள் இருந்தா பிச்சை போடுங்கையா

பொன்னாத்தா கேட்குறேன்...தயவு செஞ்சு போடுங்கையா


Tuesday, October 21, 2008

ஆதாமா? ஏவாளா?

ஆதாம் ஏவாள் தான் முதல் மனித பிறவிகள் என்று ஒரு மதம் சொல்லுது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வேற எந்த மதத்திலயும் முதல் மனித குறிப்பு எதுவும் இல்லை என்பதால் என்னோட பதிவுக்காக இவங்க ரெண்டு பேரையும் கடன் வாங்கிருக்கேன்.

சரி. பதிவோட விஷயத்துக்கு வருவோம். யாரு ரொம்ப தைரியசாலி ; யாரு ரொம்ப creative? பொண்ணுங்க தான்னு நான் அடிச்சு சொல்லுவேன்.
நான் என்ன நினைக்குறேன்னா ...ஏவாள் -ல இருந்து ஆரம்பிச்சு பொண்ணுங்க தான் இப்பவும் புது மனமும், தைரிய குணமும் நிறைந்தவர்கள். ஏவாள் is an explorer. அட உடனே டோரா த எக்ஸ்ப்லோறேர்-நு டயலாக் விட கூடாது .
அந்த தொடகூடாத ஆப்பிள் தொட்டா என்ன ஆகும். அப்டி அதுல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்குற ஒரு ஆர்வம் ஏவாள் கிட்ட இருந்துருக்கு...


படத்தில் இருக்கும் வசனம் : "Well your mother ate the apple from the forbidden tree, so now we have to pay taxes"

அப்போவும் ஆதாம் எனக்கென்ன -னு தலைய சொறிஞ்சுகிட்டு உக்காந்திருக்க கூடும்னு கொஞ்சம் நம்மள சுத்தி கண்ணோட்டம் விட்டோம்ன ஆதார பூர்வமான அடையாளங்கள் நிறைய கிடைக்குது. யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய.?.......ஹ்ம்ம்ம்ம்


படத்தில் இருக்கும் வசனம் : "You created Adam first?.....Now I'll never get him straightened out !"

ஒரு பெரிய ஆப்பிள் மரம் குடுத்து அதுல இருந்து ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் ஏன் ஒதுக்கி வைக்கணும்? ஏதோ எங்கயோ இடிக்கல? கடவுள் நினச்சு இருந்தா அந்த ஆப்பிள்-எ ஏவாள் கண்ணுல இருந்து மறச்சு வச்சுருக்கலமே ? ஏன் செய்யல?
படத்தில் இருக்கும் வசனம் : "Uh Oh....Maybe we shouldnt have put the poison IVY so close to the fig leaves"
கடவுள் தானே நம்மை ஆட்டுவிக்கும் கருவி. நீ கடவுளின் ஒரு அங்கம் அல்லது கடவுள் உன்னுள் தான் இருக்கிறார். அல்லது நீயே தான் கடவுள்.

அப்போ இது கடவுளின் தப்பா? இல்லை ஏவாளின் தப்பா? இது இயக்குவதர்க்காகவே எழுதப்பட்ட கதை. கடவுள் தான் இயக்குனர். ஏவாள் தான் அழகான கதா நாயகி. அவள் தூண்டி விட பட்டிருக்கிறாள் . [ "விதி" பட வசனம் மாதிரி இருக்கோ?]

சின்ன வயசுல இந்த கதை சொன்னவங்க இன்னொரு விஷயமும் சொன்னாக. தொட கூடாத பழத்தை சாப்பிட்டதால் தான் இன்றும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் அப்டின்னு...என்ன மாதிரி இன்னல்கள் தெரியுமா? பிரசவ வேதனை!!; பத்து மாதம் குழந்தையை சுமப்பது !!!!! ஹ்ம்ம்....சொன்னது யாருன்னு எனக்கு ந்யபகம் இல்ல..ஆனால் ஒரு பிள்ளையை சுமந்து பெற்றெடுத்த அனுபவத்தில் சொல்றேன் இது பாவத்தின் பரிகாரம் என்றால் அந்த பாவத்தை பல முறை செய்ய நான் தயார்.

இது எழுதி கொண்டு இருக்கும் பொது விபரீதமான ஒரு எண்ணம். ஒரு வேலை அவள் அந்த பழத்தை சாப்பிடாமல் விட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும். ஆஹா......அறை குறை ஆடையுடன் .............அதை எழுதவும் வேண்டுமா?

உடனே எங்க இருந்தோ ஒரு விதி விளக்கு பொன்னை காமிச்சு அந்த பொண்ணு காலைல பத்து மணிக்கு தான் கண் முழிப்பா. சாப்பிட்ட தட்டு கூட கழுவ மாட்டாள் -னு ஆரம்பிச்சுட கூடாது . உங்கள் இல்லத்தரசிகள் சுலபமாக கையாளும் எத்தனை விஷயங்கள் உங்களுக்கு இன்னும் புரியாத புதிர்? குழந்தைகளை அவர்கள் கையாளும் விதம் எத்தனை பேருக்கு அத்துப்படி? கிண்ணம் நிறைய சோறை என்றாவது முழுவதுமாக ஊட்ட முடிந்திருக்கிறதா?அதுவும் முகம் சுளிக்காமல்.?

சரி என்ன தான் பொன்னாத்தா சொல்ல வர்றன்னு கேக்குறேங்களா? கடவுளுக்கு அன்னிக்கே தெரிஞ்சுருக்கு. பெண்கள் திடமான மனதும் வலுவான உடலும்,தாய்மை எண்ணமும் கொண்டவர்கள்ன்னு .என்ன நான் சொல்றது சரி தானே?

இதுக்கு மேல அந்த புண்ணியவதிக்கு என்ன பரிசு வங்கி குடுக்கலாம்னு யோசிக்குது உங்க கவலை. ஹி ஹி .....

சிரிப்போம் சிந்திப்போம்
பொன்னாத்தா =)

Tuesday, September 16, 2008

இதுவல்லவோ திறமை .....

3D chalk painting on the street.














What if it rains? what if some one walk on it?....
Whatever, isn't awesome?
Anbudan
Ponnaththa



Monday, September 08, 2008

Go Green Mommies


When every human being on this globe is talking about global warming, who is more concerned about the future?

Any guess?
25 members of global warming commission?
President of the USA?
UN?
Nah…….

It’s the Mothers . Yes. Amma; Mommy; Aayi; Amme; Mom; whatever u call her.

It is the Mother who is very concerned about the future of the Earth. May be she is little selfish and not worried about the earth but for her child she is worried about the environment. And I can see that she is taking all the possible measures she could to protect her child and the earth.

What? You need proof?

I do not have any Audio or video proof But in my everyday life, I can see the concerned eyes and the worried whispers from the new Mommies.

According to a research, the average American generates four pounds of solid trash per day, for a grand total of 1,460 pounds per year. Americans are the number one global trash offenders. Every day, we dispose of approximately 200 million tons of the stuff. Less than one-quarter of it is recycled, leaving the rest for land fills and incinerators.

Wow…..Thats a good number huh? Yes It is.

Why is that? Living in America is both good and bad. You have to do everything by yourself. From cooking to bathroom cleaning . Servant maid? No way. They earn more money than we do. Not everyone can afford a servant maid and we dont prefer that either.

So when we have lot of people over for dinner or lunch, to make things easy, we are inclined to use plastics/paper plates which are easy to store and easy to throw which produces lot of 'Not so earth friendly' garbage.

But for the last few months, I can see the difference that Mommies are restricting the use of plastics and they are ready to do the extra work of cleaning the vessels. Trying to take their reusable bags along to the vegetables market though we cannot get everything in a small bag. Following the husbands and the little ones to switch off the lights and the AC`s when it is not in use. Cleaning the refrigerator by throwing unwanted which in turn uses less energy.

So tell me now, who is alteast trying to save the earth? Do you agree?


So if you are a mom/dad/uncle/aunty, who hasnt started worrying about it yet, Please think about it.

Lets try to present a safe and a beautiful world to our next generations. Thanks for your cooperation Mommies

What can we do which doesnt affect our daily routine but still helps the environment.

  • Seperate recycleable garbage
  • Use public transportation
  • Use foam cups as a substitute of plastic cups.
  • Try to stay cool with the Fan and avoid AC
  • Use the sunlight to dry your clothes and avoid dryer.
  • Load the dishwasher only if it is full.
  • Print 2 pages per sheet and both the sides. ( Dont say that your company is paying for the paper and the catridge and you dont care. )
  • Wear good outfit and lower your thermostat during winter.
  • Use reusbale water bottles and if you are buying mineral water, please buy the cans and not the 16 oz bottles.

Thanks in advance

Ponnaththa