Friday, February 27, 2009

குப்பைத் தொட்டி மனிதர்கள்

இது எனக்கு இ மெயிலில் ஆயிரக்கணக்கான ஃபார்வேர்டு பொத்தான்கள் அமுக்கப்பட்ட பிறகு வந்து சேந்துச்சு....படிச்சதும் என்னமோ ரொம்ப உண்மைன்னு தோணுச்சா..அதுனால சரி நம்ம மக்கள் கிட்ட பரிமாரிக்கலாமேன்னு...
[என்னமோ ஆயிரக்கானவங்க வந்து பதிவு படிச்சுட போற மாதிரி நினைப்புத் தேன் ...]
-----------------
ஒரு நாள் நண்பி ஒருத்தி வாடகை மகிழுந்துல ஏறி விமான தளத்துக்கு போறதுக்காக போயிட்டு இருந்தா....மகிழுந்து ஓட்டுனர் மிகவும் ஜாக்கிரதையா நிதானமா வண்டி ஓட்டிட்டு இருந்தார். திடீர்னு ஒரு பொந்துக்குள்ள இருந்து வந்த மாதிரி சந்துக்குள்ள இருந்து வந்துச்சு இன்னொரு மகிழுந்து ..
அப்டியே பிரேக் மேல ஏறி நின்னு இழுத்துப் பிடிச்சு ரெண்டு வண்டிக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாம நண்பியோட வண்டி ஓட்டுனர் வண்டியை நிறுத்திட்டார்.
இவர் வண்டிக்கு எந்த ஒரு சேதமும் குடுக்காம கிளம்ப எத்தனிக்கும் போது அந்த இன்னொரு ஓட்டுனர் வசை பாட ஆரம்பிச்சுட்டார். என் தோழிக்கு பயங்கர கடுப்பு....சரி ஊர் பேர் தெரியாத ஊர்ல நமக்கு ஏன் வம்புன்னு இவ வாயில ஸிப் இழுத்து போட்டா...

இருந்தாலும் இவளோட ஓட்டுனர் எதுவுமே நடக்காம ரொம்ப சாதரணமா இருந்தது பார்த்து இவளுக்கு ஆச்சர்யம்.அவர் கிட்டயே கேட்டா " என்னங்க..அந்த ஆள் தப்பும் பண்ணிட்டு என்னமோ நீங்க தான் தப்பு பண்ண மாதிரியும் அவன் ஏதோ லார்டு லபக்கு தாஸ் மாதிரியும் பேசுறானே..உங்களுக்கு கோபம் வரலியான்னு"...அதுக்கு ஓட்டுனர் சொல்லிருக்கார்...." கோபம் எல்லாம் வரலீங்க...எனக்கு அந்த ஆளை பார்த்தா பாவமா தான் இருக்கு...இவரை மாதிரி நம்மளை சுத்தி நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க ...இவங்க எல்ல்லாம் குப்பை வண்டி மாத்ரிங்க ..தினமும் கோப தாபங்க, ஏக்கம், இயலாமை, எரிச்சல் எல்லாத்தையும் சேர்த்து சேர்த்து வச்சுட்டு இருப்பாங்க....குப்பை வண்டி நிறைஞ்சதும் இறக்கி வைக்க இடம் தேடுவாங்க......நம்மளை மாதிரி ஆளுங்க மேல கொட்டி விட்டு போயிடுவாங்க நாம அவர் பேசினதுக்கு பதில் பேசினா நம்ம அவர் குப்பைய அள்ளுற மாதிரி ஆயிடும்...தூசி தட்டி விட்டா மாதிரி இதையும் தட்டி விட்ட போனா தான் நமக்கு நல்லது...இல்லன்னா இந்த குப்பையை அள்ளிட்டு போயி நாம வீட்ல நம்ம பிள்ளை குட்டிங்க இல்லாட்டி அலுவலகத்துல நம்ம கூட வேலை பாக்குறவங்க மேல கொட்டிடுவோம்.."

அப்போ தான் என் மர மண்டை நண்பிக்கு தோணிருக்கு..ஆஹா...எம்புட்டு பெரிய விஷயத்தை இவ்ளோ சாதரணமா சொல்ராறேன்னு....

---------------------- -----------------------------------------------------------------------

சரி....என்ன தான் சொல்ல வர்றன்னு நீங்கள்லாம் இடத்தை விட்டு எந்திருக்குறது தெரியுது....முடிச்சுடுறேன்..முடிச்சுடுறேன்..
# எக்காரணத்தைக் கொண்டும் உங்க மேல குப்பையை கொட்ட விடாதீங்க
#இருக்க போறது கொஞ்ச நாள்...அதுல ஏன் காலங்காத்தால எந்திரிக்கும் போதே குப்பை மூஞ்சியோட எந்திரிக்கனும்?
#உங்களை நல்ல படிய மதிக்குரவங்களை நீங்களும் மதிச்சு நடந்துக்கோங்க...
#உங்களை கேவலமா நடத்துரவங்களை மன்னிச்சு மறந்துடுங்க....[ போன வருஷ performance-க்கு review சரியா குடுக்காத மேலாளரையும் மன்னிப்போம்.மறப்போம்...]
#Life is ten percent what you make it and ninety percent how you take it!



சரி....எனக்கு ஒரு சந்தேகம்.....இப்போ என் கிட்ட இருக்குற குப்பையை கொட்டலாமா கூடாதா ? ...அவ்வ்வ்வ்வ்வ்வ்

குப்பையுடன்
பொன்னாத்தா

Wednesday, February 25, 2009

தொடர் பதிவு- வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

இதுக்கு பேரு தான் பழிக்கு பழி வாங்குறது...


நான் ஒரு தொடர் பதிவுல இழுத்தேங்குறதுக்காக மருத்துவர் மறுபடி என்னை ஒரு தொடருக்கு இழுத்துட்டார்.....இருந்தாலும் சந்தோசம் தான் ..ஏன்னா இது தங்க தமிழ் பற்றிய பதிவாச்சே

வழக்கொழிந்த சொற்கள் என்ன எல்லாம்..?

அப்டியே இந்த தொடரை தொடர்ந்து போயி பார்த்ததுல அப்டி இப்டின்னு நம்ம பதிவர் உலகம் மறந்து தொலைந்து...தொலைய போகுற எல்லா வார்த்தைகளையும் இழுத்து புடிச்சுடுச்சுன்னு தான் தோனுது.

தொலஞ்சு போன விஷயத்தை தேடுறதுக்கு பதிலா ஏன் தொலஞ்சு போன காரணத்தை தேட கூடாது?

ஆகா நான் இத்தனை வார்த்தைகளை தொலைச்சுட்டேன்னு சொல்றதுக்கு பதிலாக .....இனிமே இந்த வார்த்தைகளை தொலைக்க மாட்டேன்னு தான் நான் முடிவு எடுத்துருக்கேன்

ஏன் தொலையுது..எப்டி தொலையுது...நம்மளோட வினைகளுக்கும் நம்ம சுற்றி இருக்குற வினைகளுக்கும் நாம தாங்க காரணம்.

புள்ளைய பள்ளிக்கூடத்துல சேர்த்தா கேள்வி கேப்பாங்களேன்னு முதல்ல இருந்து வார நாட்களை திங்கள், செவ்வாய்னு சொல்லாம மன்டே, ட்யுஸ்டே ன்னு சொல்லித் தர்றோம் ....ஒன்னு, ரெண்டுன்னு சொல்றதுக்கு பதிலா ஒன், டூ ???

எத்தனை பேர் வழக்கு தமிழுக்கு பதிலா ஆங்கில உபயோகம் பெருமைன்னு நினைக்குறோம்

என் கிட்ட தமிழ் தெரிஞ்சவாங்க யாராது ஆங்கிலத்துல பேசின அப்டியே கேப்பேன்...ஏன் தேவை இல்லாம ஆங்கிலத்துல பேசுறீந்கன்னு...

என்னை நினைக்குறேங்க --".What do you think?....

"அப்டின்னு தான் நான் நினைக்குறேன்.... ".ya I think so... "..

பல்லு தேச்சுட்டு வரேன் - Brush pannittu varen

என் மனைவி- My wife

என் கணவர்- My husband

என் பொண்ணு- my daughter/ my kid

என் பையன் - my son/ my kid


தமிழ்ல தான் சொல்றேங்குரவங்க கை தூக்குங்க பார்க்கலாம் ..1, 2,...??...அவ்ளோ தானா?

ஒரு தடவை நடிகர் மாதவன் பேட்டி பார்க்கும் பொது அவரோட மனைவியயிம் மகனையும் குறிப்புட்டு சொல்லும் பொது அழகா என் மனைவி, என் மகன்னு அவர் சொனனது எனக்கு சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்துச்சு....

எப்போவுமே நிறை குடம் தளும்பாது, குறை குடம் கூத்தாடும்குறது உண்மையா தான் போகுது....

ஏன் ஆஸ்கர் மேடையில ரஹ்மான் தமிழ்ல பேசனும்குறது கட்டாயமா....இல்லியே... மனுஷன் அழுறதுக்கும் சந்தோஷத்துக்கும் எப்டி அம்மா மடி தேடுறானோ அது மாதிரி தான் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் தாய் மொழி..

என் அலுவலகத்த்தில கூட ரஹ்மானை சிலர் தூற்ற தான் செஞ்சாங்க....ஏன் ஹிந்தி-ல பேசிருக்கலாமேன்னு....மேல சொன்னது தான் என்னோட பதிலா இருந்துச்சு...

முதலில் நான் ஒரு தமிழன் அப்புறம் தான் இந்தியன்...

இங்க வெளி நாடுகள்ல இரு மாதிரியான குழப்பம்..

1. ஒன்னு, பிள்ளைக்கு வீட்ல தமிழ் சொல்லி குடுத்தா பள்ளிக்கூடம் போனதும் கஷ்டப்படுவாங்களே....அப்படின்னா வீட்ல ஆங்கிலம் பேசுவதா?

2. இன்னொன்று , சிறு பிள்ளைங்க எப்டியும் நெருப்பு மாதிரி புடிசுக்குவாங்க......அதுனால பள்ளிக்கூடம் போறப்போ ஆங்கிலம் கத்துகிட்டா போதும் .... இப்போ தமிழ் சொல்லி தரலைன்னா ஊர்ல இருந்து தாத்தா பாட்டி தொலை பேசில பேசினா கூட புரியாம தெரியாம முழிப்பாங்க....அப்புறம் குடும்பம்னா என்னன்னே மறந்து போயிடும்.....என்ன எல்லாம் பிரச்னை பாருங்க

மக்களே...எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? ஒவ்வொரு நாளும் படுக்க போகும் போது இன்னிக்கு எத்தனை ஆங்கில வார்த்தைகள் உபயோகிச்சோம்..அதுல எதை தவிர்த்து தமிழ் வார்த்தைகள் உபயோகம் செய்திருக்கலாம்...அப்டி செஞ்சா தமிழ் வழக்கொழிந்து போகாமல் இருக்குமான்னு ஒரு கணம் யோசிப்பீங்களா? தயவு செஞ்சு முயற்சி பண்ணுங்க...


என்னோட இரண்டு நயா பைசாக்கள் : [ My 2 cents !!]

வெள்ளணை = விடியல் காலை

வானவெளி = வீட்டின் பின்னால் இருக்கும் சிறிய பகுதி...சூரிய வெளிச்சம் படும் படியாக இருக்கும்.....கூரை இருக்காது


என்ன ? பொன்னாத்தா சொல்றது சரி தானே?

நான் வம்புக்கு இழுக்குறது ..

கண்ட நாள் முதலாய் Truth

என்றும் சேலையை வரிஞ்சு கட்டிக்கிட்டு !!

பொன்னத்தா

Sunday, February 22, 2009

Way to Go India!!


....இந்தியாவுக்கே பெருமை வாங்கி தந்த ரஹ்மானுக்கு ஒரு பெரிய ஓஓஓ என்ன ஒரு சந்தோசம்....அப்பா...என் கால் தரைல நிக்கல....எனக்கே இப்டி இருந்துச்சுன்னா அவங்க குடும்பத்தில எல்லாரும் எப்டி குதிச்சுருப்பங்க?


திறமை என்னிக்குமே வீண் போகாதுங்குறது உண்மை தானே?


வேற எந்த ஊர்ல அயல் நாட்டுகாரங்களை கூப்டு விருது குடுக்குறாங்க....இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் தான் பார்க்க முடியும்


நல்ல முறையில் தகுந்தவர்களை தேர்வு செய்ததற்கு ஆஸ்கர் அகேடமிக்கும் நன்றி நன்றி
ஏங்க..வேற யாரவது ஒரே வருஷத்துல ரெண்டு ஆஸ்கர் வங்கிருக்கங்களா ..இல்ல தானே?....அப்போ ரெட்டை மடங்கு சந்தோசம்....


இந்த நல்ல வாய்ப்பை குடுத்ததற்கு டைரக்டர்க்கும் நன்ற சொல்லணும்....


ஐயோ...என்ன என்னமோ சொல்லனும்னு இருக்கே...என்ன எழுதுறதுன்னு தெரியலியே


வாழ்த்துக்கள் ரஹ்மான்.....வாழ்த்துக்கள் இந்தியா

Thursday, February 19, 2009

என்னை கவர்ந்த ஆத்மா யார்?

என்னோட அலுவலகத்தில என்னோட டீம் 18 பேர் கொண்ட டீம். எல்லாருமே ஓரளவுக்கு இளம் வயது தான். எப்போவுமே ஏதோ ஒரு டீம் activity இருந்துட்டே இருக்கும்.

ஒரு நாள் ஒரு meeting நடந்துகிட்டு இருந்தப்போ, உங்களை மிக கவர்ந்த மனிதர் யார்னு எல்லாரும் சொல்லனும்னு சொல்லிட்டாங்க....எப்போதும் போல என் மேலாளர்...பொன்னாத்தா எல்லார் பேரையும் போட்டு அவங்களுக்கு யாரை பிடிக்கும்.ஏன் பிடிக்கும்னு எழுதுன்னு சொல்லிட்டார்...
எப்போவுமே எனக்கு தான் இந்த வேலை வரும்னு தெரிஞ்சாலும் பெரிய பகுமான கோழி மாதிரி பேனா பேப்பர் எடுக்காம தான் போவேன்....அவசர அவசரமா பேனா பேப்பர் ஒசி வாங்கி எழுத ஆரம்பிக்கும் போது...ஆஹா நம்ம வாய்ப்பு வரும் போது நாமளும் ஒரு ஹீரோ பேரு சொல்லனுமே...யாரு நம்ம ஹீரோன்னு மண்டைய குடைய ஆரம்பிச்சேன்...

ஒரு சிலர் யோசிக்க அவகாசம் கேட்டு pass சொல்லி அப்டி இப்டின்னி என் முறை வந்துடுச்சு....இருந்த கூட்டத்தில பாதிக்கும் மேல சொன்ன பெயர் "பராக் ஒபாமா ".....என் பேர் சொன்னதும் , டக்னு நான் சொன்னது இந்திரா காந்தி....நான் பள்ளிகூடம் சேர்ந்த புதுசுல இந்திரா காந்தி சுட்டு கொன்னுட்டங்கன்னு ஸ்கூல் விடுமுறை விட்டதும் சந்தோஷமா தான் வீட்டுக்கு போனேன்...ஆனா தீவிர காங்கிரஸ்வாதியான என் தாத்தா பட்ட வருத்தத்தையும், ஆத்திரத்தையும் பார்த்து தான் எனக்கு இந்திரா காந்தி ரொம்ப முக்கியமானவங்க போல இருக்குன்னு புரிஞ்சது....

சத்தியமா எனக்கு இந்திரா காந்தி பற்றி பெரிசா எதவும் தெரியாது.....ஆனா என்னை பொறுத்த வரைக்கும் ஒரு தைரியமான பெண். அவங்களோட ஒளி நகல்கள் பார்க்கும் போது...எவ்ளோ தைர்யமா இவ்ளோ ஆண் மக்களுக்கு நடுவில தலை நிமிர்ந்த நிக்குறாங்களேன்னு இப்போ மட்டும் இல்லை, அந்த விவரம் புரியாத வயசுலேயே நினச்சுருக்கேன்....

அப்போ இருந்து இப்போ வரைக்கும் எங்கயும் யாராவது ஒரு பெண் சாதனை செஞ்சா ஒரு கணம் மனசால அவங்களை வாழ்த்துறது உண்டு...
இந்திரா காந்தி மாதிரி வரணும்னு நினச்துனாலயோ என்னவோ இது வரைக்கும் வாழ்கையில எதுக்கும் பயந்தது இல்லை....
இந்திரா நூயி, காண்டலிசா , புராண காலத்தில அதிதி , ஜான்சி ராணி, இவங்க எல்லாம் தான் என்னை கவர்ந்தவர்கள்....

உங்களை கவர்ந்தவர்களை பகிர்ந்து கொள்ள நான் அழைப்பது....


டாக்டர்
தேவா
என் மகராசி நிலா
என் தம்பி IRAPEKE
Will to Live ரம்யா

விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும் ...

வாழ்க பதிவர் பனி, வளர்க எம் கூட்டம்
பேரு வச்ச ஆத்தா பொன்னாத்தா