Tuesday, November 29, 2011

புரியாமல் தவிர்த்தவை

ஒவ்வொரு முறை ஊர் பக்கம் போயிட்டு வரும் பொது சில விஷயங்கள் மனசை கஷ்டப்படுத்தினாலும் பல விஷயங்கள் நம்ம பாரம்பரியத்தை நினச்சு பெருமை படவே செய்ய வைக்குது....

சின்ன வயசுல பெரியவங்க எதுவும் சொன்னா ஆமா இந்த கிழவிக்கு வேற வேலை இல்ல..அத செய்யாத இத செய்யாதன்னு நொச்சுகிட்டே இருக்குன்னு சலிச்சுட்டே விட்ருவோம்....ஏன் சொல்றாங்கன்னு ஆராய்ஞ்சு பார்க்குற பொறுமை நம்ம கிட்டயும் இருந்தது இல்ல...எதுக்கு சொல்றோம்னு விவரிச்சு சொல்ற பொறுமை நம்ம பெரிசுங்க கிட்டயும் இருந்தது இல்ல...

இந்த தொடர்ல என்னால முடிஞ்சா வரைக்கும் ஏன் சொன்ன்னாங்க எதுக்கு சொன்னாங்கன்னு எனக்கு எட்டின வரைக்கும் கிணறு தோண்டி பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்....உங்களுக்கு தப்பா தெரிஞ்சா திருத்துங்க ..சரின்னு பட்டுச்சுன்னா உங்க வீட்டு பொடுசுங்க கிட்ட பொறுமையா சொல்லுங்க....




புரிய வைக்க,
பொன்னாத்தா

2 comments:

நட்புடன் ஜமால் said...

2 வருஷமாவா ஊர்லையே இருந்தீங்க ...


சரி சரி புரியாததை புரியவைங்க புரியுதான்னு பார்ப்போம்

Arasi Raj said...

நண்பர் ஜமால், நான் ரெண்டு வருஷம் கழிச்சு வந்தாலும் முதல் ஆளா வந்து வரவேற்றதுக்கு நன்றி