Saturday, October 25, 2008

இன்று பௌர்ணமி!!

இன்று அக்டோபர் 25

என் பிறை நிலவு
முழு மதி ஆனது
ஆம்!
அவளுக்கு வயது
12 மாதங்கள்!!

41 வாரங்களாய்
என் கருவறையை
ஆக்கிரமித்த மகரந்தம்

52 வாரங்களாய்
என் வாழ்வை
புரட்டி போட்ட பூங்கொத்து


சிணுங்கும் மததாப்பு;

சிரிக்கும் வளையோசை ;

கொஞ்சிக் குலாவிடும்

வெள்ளை நீரோடை .

நொடிக்கொரு

அவதாரம் காட்டும் பட்டாம்பூச்சி .

இமைத் துடிப்பின் நடுவினிலே
ஆச்சர்யமூட்டும் மின்னல் கீற்று.

அந்த பளிங்கு பௌர்ணமி
பல்லாண்டு பல ஆண்டு
பல கோடி நூறாண்டு
பேரோடும் புகழோடும்

புன்னகை மறையாமல்

புவியாழ வேண்டுமென்று
வாழ்த்திடலாம் வருவீரே!!!

10 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

இன்று பௌர்ணமியான பிறைநிலாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமை. அட்டகாசம். அற்புதம். பட்டைய கிளப்பறீங்க போங்க.

வார்த்தை பயன்பாடுகள் சூப்பர். உங்களுக்குள் ஒரு அற்புதமான திறமை இருக்கிறது. வாழ்த்துக்கள்.

முழு மதியான பிறை நிலவுக்கு எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பல்லாண்டு பல ஆண்டு
பல கோடி நூறாண்டு
பேரோடும் புகழோடும்
புன்னகை மறையாமல் புவியாழ வேண்டுமென்று
வாழ்த்திடும் - Who Am I.

Unknown said...

அக்கா என்னோட வாழ்த்துகள் பிளஸ் முத்தங்கள் அந்த அழகு பாப்பாவுக்கு..:))

Arasi Raj said...

Thanks Srimathi.....Namma area-ku vanthuttu ponathukku nandri....

Anonymous said...

நிலாவும் அம்மாவும் (சண்டை கோழி)...

அடுத்த பதிவு எப்போது? எங்கே ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் ஆளே காணோம்?

- Who Am I

Arasi Raj said...

hello who am i ..epdi irukkurenga....konja velai busy..Nila page-la oru pathivu potrukken...mudinja paarunga

தேவன் மாயம் said...

Happy birthday to your kutty!
deva.

Arasi Raj said...

Nandri maya thevan avargale....

Arasi Raj said...
This comment has been removed by the author.
ஹேமா said...

தாய்மையின் சந்தோஷம்,குளிர்ச்சி தழுவிக் கவியாய் எழுத்தில்.
நிலாக்குட்டி சுகமாய் சந்தோஷமாய் வாழ இனிய வாழ்த்துக்கள்.
அன்போடு அத்தை ஹேமா.