Monday, December 08, 2008

பெயர் பொருத்தம்

உனக்கு ஏன்
' நிலா'
என்று பெயர் வைத்தேன் ?

மருத்துவச்சி
'அந்த' சந்தோஷ
சங்கதியை
நிச்சயித்த நாள்
முழு பௌர்ணமி
நாள்என்பதாலா ?

ஆர்ப்பாட்டம்
பல கொண்டு

ஆசைகள் நிறை சூழ
அழகே
நீ

பூமி தொட்ட நாள்
குரு பௌர்ணமி நாள்

என்பதாலா?

நாட்கள் பதினைந்தாய்
அழகெறி மெருகூறும் நீ
மீதி பதினைந்தில்
உண்ணாமல் ,
விளையாட்டாய்
உருகி மெலிவாயே
அது தெரிந்ததாலா?

இல்லை ! இல்லை!
உன் ஒளியால்
என் தாய்மையை
ஒளிர வைத்தாலும்
என் வேலை நிமித்தமால்
பல காத மைல்
தள்ளி வசிக்கின்றாயே
அதனாலே தான்!!

கண்ணே!
என் கண்மணியே!!
வருவேன்.
விரைந்து வருவேன்.

அழகாய் ; அறிவாய்
அன்பாய் ஒளிரும்
உனக்கு பெயர்
'சூரியன்' என்றாலும்
வருவேன்
இந்த தாய்
நீ இருக்குமிடம்
விரைந்து வருவேன்.



As i have mentioned in the 'kavithai' there are so many reason why i named her Nila. When i had to take her to the doctor for poor feeding, i blamed myself for naming her Nila. She constantly kept losing weight and she is still like that. Apart from all this she is 8000 miles away from me now.
Hmm...Do you need more reason why i named her Nila?


Ellarum nalla irungappa!!
பொன்னாத்தா



3 comments:

Vijay said...

kalanga vaikireerkal. Valthukal.

ரிதன்யா said...

நன்றாக இருக்கிறது
உங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள்

ஹேமா said...

இவ்வளவும் யோசித்தா..நிலா என்று பெயர் வைத்தீர்கள்.அழகு.நிலா என்பதே தமிழின் உச்சத்தில் அமுதமான பெயர்.