Thursday, March 26, 2009

விட்டு விடு; விலகி விடு;

விடுதலைக்காகவே
காத்திருந்த
கண்ணீரும்...
-*-
விடை பெறவே
காத்திருந்த
இதயத் துடிப்பும்...
-*-
விட்டு விடவே
காத்திருந்த
நீயும்....
-*-

இன்று என்னுள்
செத்துப் போய்.




சடமாய் ...
பொன்னாத்தா

மக்களே...காதல் தோல்வி எல்லாம் இல்லீங்கோவ்...சும்மாச்சுக்கும் மனசுக்குள்ள பீலிங் ஏத்திப் பார்த்தேன்....

இதையே மாற்றி ஆதவா எழுதியது..
கண்களில்

சிறைபட்டிருந்த

கண்ணீரும்....


உனக்காகவே

காத்திருந்த

இதயத்துடிப்பும்...


விட்டுவிடாமல்

நின்றிருந்த

நீயும்...


இன்று என்னுள்

தொலைந்துபோய்....

திருத்தி எழுதிய‌ப‌டி

ஆத‌வா [ ஹி ஹி ]

17 comments:

நட்புடன் ஜமால் said...

ஆத்தா இதெல்லாம் ஜாஸ்தி

நாங்க உண்மையான பீலீங்ஸ்ல இருக்கோம்

நீங்க இப்படியா

நட்புடன் ஜமால் said...

ஆனாலும் கவிதை நல்லாவே இருக்கு

Arasi Raj said...

நட்புடன் ஜமால் said...
ஆனாலும் கவிதை நல்லாவே இருக்கு
///

நன்றிங்கோவ்

வேத்தியன் said...

கவிதை நல்லா இருக்குங்க...

ஆதவா said...

ம்ம்ம்.... புரியுதுங்க...

கண்களில் சிறைபட்டிருந்த
கண்ணீரும்

உனக்காகவே காத்திருந்த
இதயத்துடிப்பும்

விட்டுவிடாமல்
நின்றிருந்த நீயும்

இன்று என்னுள்
தொலைந்துபோய்....


ஹி ஹி.... சும்மா உங்க வார்த்தையை அப்படியே மாத்திப் போட்டு ட்ரை பண்ணேன்.. உங்க கவிதை நல்லா இருக்குங்க. சிம்பிலா.....

நசரேயன் said...

//மக்களே...காதல் தோல்வி எல்லாம் இல்லீங்கோவ்...சும்மாச்சுக்கும் மனசுக்குள்ள பீலிங் ஏத்திப் பார்த்தேன்....//

நம்பிட்டேன்,நீங்களும் எங்க ஊரிலே தான் இருக்கீங்க போல

நாகராஜன் said...

ஆஹா... கவிதை கவிதை... நல்லா இருக்குங்க சண்டை கோழி... கலக்கறீங்க போங்க.

ஆனா பின் குறிப்பு தான், "எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை"ங்கற மாதிரி இருக்குது... :) :) :)

மேவி... said...

love feelings illaiya????
kavithaiyai partha appadiya theriyalaiye....
he he he

sari sari
ennai madiri chinna paiyanukku ellam ethukku love pathinna pechu...


kavithai arumainga....
summa eluthinala ippadi irukku...
unmaiyana feeling oda eluthuna eppadi irukkumo.......



athavaa neengalum kalakkitinga....

Arasi Raj said...

@ நன்றி வேத்ஸ்

@ஆதவா, போதுமா?

@நச் , எந்தூரு நீங்க?

@ராசுக்குட்டி, குதிருக்குள்ள ஒழிச்சு வச்சு என்ன செய்ய போறேன்?

@மேவீ ,...யாரு சின்னப் புள்ளை?..அநியாயமா இல்ல?

தேவன் மாயம் said...

என்னங்க! தேர்தல் கூட்டணி மாதிரியில்ல இருக்கு!!

தேவன் மாயம் said...

ஒரு கவிதை எழுதுறதே பெரும்பாடு!!

இதில் 2 பேர்!!! ஜமாய்ங்க!!

தேவன் மாயம் said...

விடுதலைக்காகவே
காத்திருந்த
கண்ணீரும்...
-*-
விடை பெறவே
காத்திருந்த
இதயத் துடிப்பும்...
-*-
விட்டு விடவே
காத்திருந்த
நீயும்....
-*-////

”வி”

யிலேயே

மூன்று

பத்தி

அபாரம்!!

Arasi Raj said...

யாரு அது ? ஓ தேவா சாரா....வாங்க வாங்க...ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து....

நன்றி

- இரவீ - said...

ஏன் தாயி உங்களுக்கு இம்புட்டு பீலிங் ???

எது எப்படியோ கவிதை நல்லாக்கு...

Arasi Raj said...

Ravee (இரவீ ) said...
ஏன் தாயி உங்களுக்கு இம்புட்டு பீலிங் ???

எது எப்படியோ கவிதை நல்லாக்கு...
/////

அது ஏன் ரவீ கிளறிக்கிட்டு

ஹேமா said...

கவிதை நல்லா இருக்கே.நான் கவனிக்கவே இல்லையே.

சிறைப்பட்டிருந்த கண்ணீர்,
காத்திருந்த இதயத் துடிப்பு,
அட்டையாய்
ஒட்டிக்கொண்டிருந்த நீ,
அடையாளங்களாய் மட்டும்.
நான் !!!

பழமைபேசி said...

//சடமாய் ...
பொன்னாத்தா//

இது நாங்க நம்பணும்? முடியாது, முடியாது!!